தேவை ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்… இந்தியாவுக்கு உள்ளே!

modi open - 2026

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்திய அரசின் அனுகுமுறை என்பது, நான் எட்டாவது படிக்கும் காலத்திலிருந்து ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தின் நேரடியான தாக்குதலின் போதும், தீவிரவாதிகளின் மறைமுக தாக்குதலின் போதும்
பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவுத்துறை என ஒவ்வொரு அமைச்சராக வந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை கொடுப்பார்கள் . அப்போதெல்லாம் பத்திரிக்கைகளில் எல்லையில் வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம். பாகிஸ்தானுக்கு
எஸ்.பி சவான் எச்சரிக்கை என மாதத்தில் இருமுறையாவது தினமலர், தினத்தந்தியில் தலையங்கம் இடம்பெறும். அது போன்ற செய்திகளைப் படிக்கும் போதே உணர்ச்சி கொந்தளிக்கும். அடுத்தடுத்த நாட்களில் பள்ளிக்கு அரைமணிநேரம் முன்னதாகவே கிளம்பி ஆர்வத்துடன் பேப்பர் பார்த்தால் அது சம்பந்தமான செய்தியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வந்து மூன்றே நாளில், மந்திரிகளின் முக்கல்களெல்லாம் முடிந்து வேறு செய்திகள் ஆக்கிரமித்துக்கொள்ளும். அப்போது தொடங்கிய சிறிய ஏமாற்றம் இன்று பெரிய ஏமாற்றமாய் மாறியிருக்கிறது. அது மட்டுமே மாற்றம் .

நாட்டுக்கு உள்ளே இருக்கும் விஷக்கிருமிகளை முதலில் ஒழித்துக்கட்டிய பிறகே நாட்டிற்கு வெளியே எட்டிப்பார்க்க வேண்டும் என்று எப்போது தீர்மானிக்கிறோமோ அப்போது தான் இதற்கு விடிவுகாலம் பிறக்கும்.

இதற்கு ஒரு தீர்வு தான் என்ன ?

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

காஷ்மீருக்கு சுதந்திரம் கொடுக்கலாம், அல்லது பாகிஸ்தானுக்கு தாரை வார்க்கலாம். இந்த இரண்டில் எது நடந்தாலும் அத்துடன் பிரச்சனை முடிந்துவிடும் என நினைத்தால் அது முட்டாள்தனம். அப்போதும் பிரச்சனை முடியாது.

அடுத்து பஞ்சாப், அதற்கடுத்து மேற்குவங்கத்தில் சில பகுதிகள், அதற்கடுத்து கேரளாவில் ஒரு பகுதி , ஏன் தமிழகத்தில் கூட , ஆங்காங்கே சிறு பகுதிகள் என தீவிரவாதம் இருந்து கொண்டேதானிருக்கும். இந்துக்கள் முழுமையாக இல்லாமல் போனால் அதற்குப் பிறகு அவர்கள் மட்டுமே இருந்தாலாவது அமைதியாக இருப்பார்கள் என்றால் அதுவும் நடக்காது. அதற்குப் பின் அவர்களுக்குள் அடித்துக்கொள்வார்கள். உதாரணம்
( பல வளைகுடா நாடுகள் )

ஜனநாயக நடைமுறைகள் இந்தியாவுக்கு சுத்தமாகப் பொருந்தவில்லை. முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாகவே கருதுகிறேன்.
ஜனநாயகத்தை தாங்கிப்பிடிக்கும் நான்கு தூண்களும் இத்துப்போய்விட்டன.

1 நாடாளுமன்றம் : கூச்சலிடும் சந்தைக்கூடமாக மாறிவிட்டது.
தேசதுரோகிகள் சர்வசாதாரணமாக புழங்கும் இடமாகிவிட்டது

2 நீதிமன்றங்கள் : நம்பகத்தன்மை பொய்த்துபோய் பல வருடங்களாகிவிட்டது.
தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்கின்றன இந்திய நீதிமன்றங்கள்.

3 அரசு நிர்வாகம் ஊழல்மயமாகி விட்டது.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய
அரசு அதிகாரிகளும்,
அரசியல்வாதிகளும் மக்களின்
முதுகில் ஏறி சவாரி செய்கிறார்கள்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

4 பத்திரிக்கைத்துறையோ
அந்நியர்களுக்கு விலைபோய்
வெகுகாலமாகிவிட்டது.

இந்த இத்துப்போன நான்கு தூண்களால் இனி ஜனநாயகம் என்ற கூரையைத் தாங்கிப்பிடிக்கமுடியாது.

ஜனநாயகம் என்ற கூரை இடிந்து நாட்டை அழிப்பற்குள் நாம் உடனடியாக வேறு கூரைக்கு மாறவேண்டும்.

1 . இந்தியாவை இந்துநாடாக அறிவிக்க
வேண்டும்.

2 . நமது பாராளுமன்ற ஜனநாயக
நடைமுறைகள் முற்றிலும்
தோல்வியடைந்து விட்டபடியால்
அதைத் தூக்கியெறிந்துவிட்டு மக்கள்
நம்பிக்கையைப் பெற்ற
மோடிஜி போன்ற ஒரு தலைவரின்
தலைமையில் முழு அதிகாரம் பெற்ற
தேசிய அரசு அமைக்க வேண்டும்.

3 . மத ரீதியான சலுகைகள் ரத்து
செய்யப்பட வேண்டும்.

4 . சட்டம் ஒழுங்கு, கல்வி , இந்த
இரண்டும் மத்தியப்
பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்

5 . அனைத்து அரசியல் கட்சிகளையும்
தடை செய்து ஒரு கட்சிஆட்சிமுறை
கொண்டுவரப்பட வேண்டும்.

6 . தமிழகம், மேற்குவங்கம் காஷ்மீர்
போன்ற மாநிலங்களை மூன்றாகப்
பிரித்து இந்தியாவில் 50
மாநிலங்கள் வரை உருவாக்கி
மாநில அரசுகளின்
அதிகாரங்களை மாவட்ட
நிர்வாகத்திற்கும் ஊராட்சி
அமைப்புகளுக்கும் பகிர்ந்தளிக்க
வேண்டும். மாநில அரசுகள் என்பது
நிர்வாக ரீதியான
ஒருங்கிணைப்புக்கும்,
கண்காணிப்புக்குமானதாக மட்டுமே
இருக்க வேண்டும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெறுவது உறுதி என்பதால் வெற்றிக்குப் பிறகு தற்போதைய அரசியலமைப்புப்படி பதவியேற்காமலே அதிகாரத்தை கைப்பற்றவேண்டும்.

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

பாகிஸ்தானில் ஒருவர் அந்நாட்டு ராணுவத்தை கல்லெறிந்துவிட்டு உயிரோடு இருக்கமுடியுமா ?
ஆனால் இந்தியாவில் முடிகிறது !

நம் ராணுவத்தின் கையில் துப்பாக்கி இருக்கும். அதில் தோட்டாவும் இருக்கும். இருந்தும் ராணுவ வீரர்களை கல்லால் அடிப்பார்கள். நம் வீரர்கள் உடலில் ரத்தம் வடியும். துப்பாக்கியோ தூங்கி வழியும்.

நம் ராணுவ வீரர்கள் சிந்தும் ரத்தத்திற்கு அர்த்தம் இருக்க வேண்டும்
அதற்கு ஒரு மரியாதை இருக்க வேண்டும் என்றால்
தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும்

இனி ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் தேவை என்றால்….
அது இந்தியாவிற்கு உள்ளே நடத்தப்பட வேண்டுமே தவிர இந்தியாவிற்கு வெளியே அல்ல.

—- முனுசாமி ஆர்.வெள்ளோடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

Topics

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

Entertainment News

Popular Categories