ராகுல் கையை தூக்கிப் பிடித்தார்! இப்போது அசிங்கப்படுகிறார்! – முதிர்ச்சியற்ற மு.க.ஸ்டாலின்!

Stalin Rahul Gandhi Chennai - 2026

திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தில்லியில் நடைபெற்று இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. இன்று மாலை முகுல் வாஸ்னிக் சென்னை வருகிறார். கூட்டணி குறித்தும் தொகுதிகள் குறித்தும் அண்ணா அறிவாலயத்தில் வைத்து அறிவிக்க இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி, திமுக., கூட்டணியில் 15 தொகுதிகள் வரை கேட்டு வருவதால் திமுக அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்தது. எளிதாக முடியும் எனக் கருதப்பட்ட
கூட்டணிப் பேச்சு, ஜவ்வாக இழுத்துச் சென்றது. முந்திரிக் கொட்டைத் தனமாக
திமுக., செய்த செயலே இப்போது அதற்கு வினையாகப் போயுள்ளது.

கருணாநிதி இருந்த வரை, தில்லியில் இருந்து காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் சென்னை வந்து, திமுக.,வுடன் கூட்டணிக்காக முட்டி மோதுவார்கள். 2ஜி ஊழலில் சிக்கிக் கொண்ட போது, கடந்த 2009 தேர்தலின் போது தான், உண்ணாவிரத நாடகம் எல்லாம் போட்டு, இங்கே முதல்வராக இருந்த கருணாநிதி தில்லிக்கு காவடி எடுத்து, எப்படியாவது கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்று துடித்தார்.

இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், அதுவரை காங்கிரஸை தாக்கிப்
பேசிய கருணாநிதி, ஊழல்களும் வழக்குகளும் துரத்திய போது, அதே சக்கர நாற்காலியில் அமர்ந்து, சோனியாவின் காலில் விழுந்து, எப்படியாவது கூட்டணி என்று கெஞ்சினார்.

அது அல்லாமல், பெரும்பாலும், காங்கிரஸாரே சென்னைக்கு வந்து கூட்டணியைப் பேசியிருக்கின்றனர். ஆனால் தற்போது திமுக பிரதிநிதிகள்  காங்கிரஸைத் தேடிச் சென்று கூட்டணிப் பேச்சை முடித்துக் கொண்டிருக்கின்றனர். காரணம், திமுக தலைவர் ஸ்டாலின்!

அனுபவமின்மை, அவசரக் குடுக்கைத் தனம், வழிகாட்ட தகுந்த நபர்கள் இன்மை இவற்றால் தள்ளாடும் ஸ்டாலின், தான் செய்யும் செயல்களுக்கான பின்விளைவுகளை அறியாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது அவருக்கு வினையாகத்தான் முடிகிறது.

வடக்கே உள்ள எல்லாக் கட்சிகளும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கத் தயங்கி ஒதுங்கும் நிலையில், தாமாக முன்வந்து, காங்கிரஸின் சதிவலையில் சிக்கிக் கொண்டார் ஸ்டாலின். சென்னைக்கு ராகுலை வரவழைத்து, தம் வாயாலே, அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்ததில் தொடங்கி, திமுக., காங்கிரஸின் காலடியில் விழுந்து கிடப்பதும், ஸ்டாலின் தனக்கான பிடியை தவறவிட்டுவிட்டதும், உலகறிந்த ரகசியமாகி விட்டது.

இதனிடையே, திமுக., தரப்பு தொகுதிப் பங்கீடு குறித்து ரகசியமாகப் பேசப்பட்ட தகவல்கள் இப்போது ரகசியக் காப்பை மீறிக் கடந்து வெளியில் உலா வருகின்றன. காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளைக் கேட்டதாகவும், திமுக தரப்பில் முதலில் 6 தொகுதிகளுக்கு மேல் இல்லை என்று கூறி, பின்னர் 10 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Sonia karunanidhi - 2026

கூட்டணிக்காக முட்டி மோதிய திமுக பிரதிநிதி கனிமொழி, காங்கிரஸ்
தலைவர் ராகுலைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின்
ஆலோசகர் அஹமது படேல், ப சிதம்பரம், தமிழக காங்கிரஸின் புதிய தலைவர் கே.எஸ்,அழகிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.

அப்போது, பாமக., அறிவிக்கும் கூட்டணி முடிவுக்காக திமுக., காத்திருந்ததும், பாமகவிற்காக ஒதுக்கி இருந்த இடங்களை  எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என
பகிரங்கமாக காங்கிரஸ் வலியுறுத்த, தொடர்ந்து இந்தப் பேச்சு 3 மணி நேரத்துக்கும் மேல் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே, சூடு சுரணை என்றெல்லாம் ஸ்டாலின் பாமக., ராமதாஸைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம், ராமதாஸ் தம்முடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்த்து கடைசிக் கட்டத்தில் ஏமாந்து போனதையும் வெளிப்படுத்தியுள்ளது. இது திமுக., தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பௌர்ணமி முழு மதி நாள் என்பதால் கூட்டணியை இறுதி செய்து கையெழுத்திட்டது அதிமுக., தரப்பு! மேலும், மாசி மகம், ஜெயலலிதா பிறந்த ஜன்ம நட்சத்திரம் என்பதால், செண்டிமெண்டாக களத்தில் இறங்கி, இரு கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்து, கையெழுத்திட்டு, அறிவித்தது.

இன்று அடுத்த நாளான பிரதமை என்பதால், நல்ல செயல்களைச் செய்ய மாட்டார்கள் நம்பிக்கை உள்ளவர்கள். திமுக.,வுக்கு செண்டிமெண்ட் மீதோ, நாள் நட்சத்திரங்களின் மீதோ நம்பிக்கை கிடையாது என்பதால், இன்றைய தினம் கையெழுத்தாகி, இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories