பாகிஸ்தானின் பொய்யை தமிழகத்தில் பரப்பும் தறுதலைகள்!

attack pakistan - 2026

இந்திய விமானப்படை பாகிஸ்தானிய நிலப்பரப்பில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை… அப்படி தாக்குதல் நடத்தச் சென்ற விமானங்களை பாகிஸ்தான் விமானங்கள் விரட்டியதால் , திரும்பி வரும் வழியில் விமானத்திலிருந்த வெடிகுண்டுகளை கீழே வீசி விட்டு தப்பி வந்துவிட்டனர்… என்ற பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை அப்படியே பிரதி எடுக்கும் புல்லுருவிகளுக்கு சில கேள்விகள்..!?

ஒரு வாதத்திற்காக இது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். நேற்று சுமார் 11 மணி அளவில் இந்திய வெளியுறவுத் துறை செயலர் திரு விஜய் கோகலே அவர்கள் , நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய முழு விவரங்களையும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதன்படி எத்தனை இடங்களில் தாக்கினோம் , அதனுடைய விளைவுகள் என்னென்ன , எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கக்கூடும், அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட முக்கியமான நபர்கள் யார் யார் என்பதை எல்லாம் தெரிவித்தார் ….

தாக்குதல் நடைபெற்றது நேற்று அதிகாலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் …. ஒருவேளை பாகிஸ்தான் சொல்வதுபோல அங்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் , நேற்று காலையிலேயே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று , இதோ இந்த இடங்களைத்தான் இந்தியா தாக்கியதாக சொல்லிக்கொள்கிறது ….இங்கு எதுவுமே நடக்கவில்லை பாருங்கள்… என்று காட்டுவதில் என்ன பிரச்சினை? அப்படி காட்டி இருக்கலாமே?

சரி பதினொன்று முப்பது மணி அளவில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இன்னின்ன இடங்களை நாங்கள் தாக்கினோம் என்று தெளிவாக அறிவிக்கிறார்… அதன்பிறகு அந்த இடங்களில் இப்போதைய புகைப்படங்களை, அல்லது வீடியோக்களை பாகிஸ்தான் பகிரலாமே?

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

இதோ பாருங்கள் இங்குதான் தாக்குதல் நடத்தியதாக இந்தியா சொல்கிறது… இங்கு எந்த பாதிப்பும் இல்லை என்று காட்டலாமே? ஏன் காட்டுவதில்லை?

சரி பத்திரிகையாளர்களை அவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம்…. பாகிஸ்தான் அரசு ஒரு ஹெலிகாப்டர் மூலம் மேலே சொன்ன இடங்களுக்கு மேலே பறந்து சென்று ஒரு வீடியோ எடுத்து அதை மீடியாக்களில் ஒளிபரப்பலாமே ?அதை யார் வேண்டாம் என்று சொன்னார்கள்?

மேலும் இன்னின்ன பயங்கரவாதிகள் , அதாவது மேற்படி பயங்கரவாத அமைப்பின் கமாண்டர்கள் இன்னின்னார் கொல்லப்பட்டார்கள்.. என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது . அப்படி அவர்கள் யாருமே கொல்லப்படவில்லை என்றால் , இதோ அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்று காட்டலாமே? ஏன் மசூத் அசார் கூட மேற்படி தளபதிகளை தன் அருகிலேயே அமர வைத்து ஒரு வீடியோ எடுத்து அதை ஒளிபரப்பலாம்…. இதோ பாருங்கள் இவர்களைத்தான் இந்திய ராணுவம் கொன்று விட்டதாக சொல்லிக்கொள்கிறது… இவர்கள் யாரும் கொல்லப்படவில்லை… உயிருடன் தான் இருக்கிறார்கள் என்று காட்டலாமே?

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

அடுத்ததாக இந்திய ராணுவமும் இந்திய வெளியுறவு அமைச்சகமும் குறிப்பிட்டுள்ள பாதிப்புக்கு உள்ளான இடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதை ஏன் பாகிஸ்தான் தடுக்கிறது? அந்த இடங்களுக்கு யாரையுமே அனுமதிக்காமல் பாகிஸ்தான் ராணுவம் தடுக்கவேண்டிய அவசியம் என்ன ?

இந்த கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது பதில் இருக்கிறதா? தாக்குதல் நடந்தது உண்மை. இந்திய வெளியுறவு அமைச்சகம் சொன்னது மறுக்கமுடியாத , அசைக்கமுடியாத உண்மை…. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் (ஏற்றுக்கொண்டால் அவமானம்) அதேசமயம் தாக்குதல் நடந்திருப்பதாக இந்திய ராணுவம் சொல்வதை ஆதாரபூர்வமாக மறுக்கவும் முடியவில்லை ….சரி இந்திய ராணுவம் தாக்கவில்லை என்று பாகிஸ்தான் சொல்லிக் கொண்டால் அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டு இருக்கும் வரை இந்தியா திரும்ப திரும்ப தாக்கிக் கொண்டே இருக்கும் …பாகிஸ்தான் வெளியே சொல்லவும் முடியாது இதுதான் அவர்களுடைய நிலைமை…

இதைப் புரிந்து கொள்ளும் அறிவு கூட இல்லாமல் இந்த நாட்டில் பிறந்து , இந்த நாட்டில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு , இந்திய சோற்றைத் தின்றுகொண்டு இந்த தேசத்துக்கு எதிராக பதிவு செய்யும் துரோகிகள் அனைவரும் இப்படி ஒரு பிழைப்பு பிழைக்க வேண்டியது அவசியமா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்!

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

– சரவண குமார் Saravana Kumar

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories