அப்துல் கலாமை அவமதித்த கயவர்கள்! திராவிட திருட்டு கும்பல்!

kalam modi - 2026கனவுகளை கலைத்து அப்துல்கலாமை அவமதித்தவர்கள்! நாடே போற்றும் அப்துல்கலாமை அவமதித்தவர்கள் உண்டெனில் அது  சோனியா காந்தியும் கருணாநிதியும் தான்!

2007 ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட விரும்பிய பொழுது அன்றைய ஆளும் கட்சியான காங்கிரசின் தலைமைபீடமான சோனியா காந்தியினால் தடுக்கப் பட்டு இந்திராகாந்தி குடும்பத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும், சொல்லப் போனால் சோனியா வீட்டில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த வீட்டு வேலை பார்த்த பிரதீபா பாட்டீல் என்ற மகாராஸ்டிர பெண்மணிக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கப் பட்டது. இதை விட இந்த நாடு வேறு கேடு கெட்டத் தனத்தை சந்திக்க முடியுமா? அதையும் செய்து பார்த்தது இந்த காங்கிரஸ்

திமுக நினைத்திருந்தால் அன்று காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அப்துல்கலாமை முன்னிறுத்தி இருக்க முடியும். ஆனால் குடும்ப நலன்களுக்கு முன் நாடாவது கொள்கையாவது.. நாட்டைப் பற்றி வாய் கிழிய மேடை போட்டு பேசும் மற்ற கட்சிகள் அப்துல் கலாமை விட எந்த விதத்தில் பிரதீபா பட்டீல் உயர்ந்தவர் என்று போராடாமல் சொந்த அரசியல் லாபங்களுக்காக அப்துல் கலாம் மீது சோனியாவிற்கு இருந்த வன்மம் நிறைவேற பிரதீபா பட்டேலை தேர்ந்தெடுத்தார்கள்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

Modi Abdul Kalam - 2026

அப்போது வாய்ச்சாடல் வித்தகர் கருணாநிதி, கலாம் என்றால் கலகம் – என்ற வாசகத்தை முன்மொழிந்து, நாடே போற்றுமொரு தமிழரை அவமதித்தார் கருணாநிதி என்ற தெலுங்கர்!

தமிழகத்தில் கோவையில் 2010ல் நடைபெற்ற உலக செம்மொழி தமிழ்மாநாட்டிற்கு சிறந்த மொழிஅறிஞரும் பார் போற்றும் தமிழரான அப்துல்கலாமை அழைத்து கவுரவிக்காமல் வேண்டுமென்றே அவமதித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

2012ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மீண்டும் அப்துல் கலாம் பெயர் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி மற்றும் சிலரால் பேசப்பட்டபட்ட பொழுது.. “கலாம் என்றால் கலகம்” என்று பொருள் உள்ளது! அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் கலகம் உண்டாகியுள்ளது என்று அந்த உயர்ந்த மனிதரை காயப்படுத்தி மீண்டும் ஒரு சிறந்த ஜனாதிபதியாக மக்களுக்கு நன்மைகளும் பெருமித உணர்வும் கிடைப்பதை தடுத்தவர் திருட்டு முட்டாள் கட்சியின் தலைவர் தில்லு முல்லு கருணாநிதி.

அப்துல் கலாம் இறந்த போது இந்த நடிகர் கூட்டம் அப்துல் கலாமுக்கு பக்கம் பக்கமாக அஞ்சலி பாடினார்கள். ஆனால் அவர்கள் ஒரு வார்த்தை கூட திமுக., தலைவராக இருந்த கருணாநிதியிடம் இது குறித்துக் கேட்கவில்லை! கேட்டதுமில்லை! 

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

நாகரீகம், கண்ணியம் என்ற பெயரில் சில உண்மைகளை நாம் மறைக்காமல் நம் சந்ததியினருக்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.

இந்தியாவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆர் வெங்கட்ராமன் மற்றும் அப்துல் கலாம் இருவரும் ஓய்வுக்கு பிறகு தமிழகத்திலேயே தங்க விரும்பியபோது, வெங்கட் ராமன் அவர்களை பாதுகாப்புக் காரணங்களை காட்டி (புலிகள் அச்சுறுத்தல் என்ற பெயரில்) கிரீன்வேஸ் சாலையில் – இங்கே தங்க விடாமல் திருப்பி அனுப்பியது யார் என்பதை ஒவ்வொரு தமிழனும் யோசிக்க வேண்டும்.

அதே போல அப்துல் கலாம் ஓய்வுக்கு பிறகு இங்கே அண்ணா பல்கலையின் விருந்தினர் மாளிகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை முதல் முறையாக தங்க வந்த போது மின்சார ஷார்ட் சர்கியூட் என்ற ஒரு நாடகம் ஆடி கலாம் அவர்களை தமிழகத்தில் தங்க விடாமல் திருப்பி அனுப்பியது யார் என்பதையும் மக்கள் தயவு செய்து சிந்திக்கவேண்டும்.

எந்த கலாம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்து கையொப்பம் இட்டாரோ அவரே அந்த மாநாட்டுக்கு அழைக்கபடாத காரணம் என்ன?

modi open rameswaram kalam - 2026

தனக்குத்தானே பட்டமும் பாராட்டும் நடத்திக் கொண்ட கேடுகெட்ட தமிழக அரசியல் கலாச்சார நிகழ்வை மக்கள் ஜனாதிபதி கலாம் புறக்கணித்தார். அதன் காரணமாக அருகதை இல்லாதவர்கள் எல்லாம் அவரை அசிங்கப் படுத்தும் அவலம் இந்த தேசத்தில் மட்டுமே நடந்தது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கலாம் அவர்கள் இந்த தேசத்தின் ஞானக் குழந்தை. தனது ஞான குருவாக அப்துல் கலாமைப் போற்றி, அவருடைய நல்லடக்கத்துக்கு வந்து, இறுதி மரியாதைகளை உடனிருந்து செய்தார் பிரதமர் மோடி!

அதுமட்டுமல்ல… கலாம் நினைவாக, பிரமாண்டமாக மத்திய அரசால் பராமரிக்கப்படும் தேசத்தின் அஞ்சலி மையமாக  கலாம் நினைவிடத்தை மிகக் குறுகிய காலத்தில் நிறுவி, அதனைத் திறந்து வைத்து, தமிழர்களின் நெஞ்சில் பெருமையையும் பெருமித உணர்வையும் தோற்றுவித்திருக்கிறார் பிரதமர் மோடி! 

ராமநாதபுரம் மண் இன்று உலகுக்கு ஒரு உன்னதத் தலைவனின் உழைப்பையும் ஒப்புயர்வற்ற தியாகத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories