December 5, 2025, 7:49 PM
26.7 C
Chennai

மோடியின் வேலை Vs மோடிமஸ்தான் வேலை!

Rahul Gandhi Narendra Modi - 2025

போகாத ஊருக்கு வழி சொல்கிறார் ராகுல். சுவிட்சர்லாந்தில், வேலை, வருமானம் இல்லாத, 12 சதவீதம் பேருக்கு, ஆண்டுக்கு, 30 ஆயிரம், ‘யூரோ’வை, அந்நாட்டு அரசு வழங்கியது. இது, இந்திய ரூபாயில், 23.38 லட்சம். உதவி பெற்றவர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை; சோம்பேறிகளாகி, வீடுகளில் முடங்கினர்; போதை பழக்கத்திற்கு அடிமையாகினர். இது தொடர்பான ஓட்டெடுப்பில், திட்டத்தை செயல்படுத்த, 88 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்; பின்னர் திட்டம் கைவிடப்பட்டது.

இங்கிலாந்தில், 18 வயதுக்கு மேற்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு, மாதம், 450 ‘பவுண்டு’ வழங்கப்பட்டது. இது இந்திய ரூபாயில் 41 ஆயிரம். இளைஞர்களும், இளம் பெண்களும் உல்லாசமாக வாழ்ந்தனர்; எதிர்கால லட்சியம், முன்னேற்றத்தை மறந்து, சோம்பேறிகளாக மாறி விட்டனர்.

ஆனால், பிரதமர் மோடி அப்படியில்லை. அனைவருக்கும் வீடு, ஒரு ரூபாயில், இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு, ஓய்வூதியம், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை திட்டத்தை செயல்படுத்தினார். மேலும், 12 கோடி விவசாயிகளுக்கு, நாற்று நடவும், உரம் வாங்கவும், அறுவடை செய்வதற்கும் என ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்திட்டத்தை அமல்படுத்தினார். வங்கியில் கடன் வாங்கி, திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, சுய தொழில் செய்து முன்னேறும் வேலை வாய்ப்புகளை, பிரதமர் மோடி உருவாக்கி கொடுத்துள்ளார்.

ஆனால், மாதம், 6,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாயை இலவசமாக வழங்கி, மக்களை வேலைக்கு செல்லாமல், வீட்டில் முடக்கி வைக்கும் திட்டத்தை, ராகுல் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்தினால் பணவீக்கம் ஏற்படும்; மானிய திட்டங்களை நிறுத்தும் நிலை உருவாகும். அதற்கு பதிலாக, 3.6 லட்சம் கோடி ரூபாயில், நீர் ஆதாரங்களை மேம்படுத்துவேன்; நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் என, அறிவித்திருந்தால் வரவேற்கலாம். பிரதமர் வேட்பாளராக, ராகுலை வட மாநில மக்கள் ஏற்கவில்லை…

எனவே, போகாத ஊருக்கு வழி செல்வது போல, பொய்யான, சாத்தியமில்லாத வாக்குறுதிகளை ராகுல் அறிவித்து, மக்கள் மனதில் இடம் பெற முற்படுகிறார். அவரது எண்ணம் நிறைவேறாது. நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும், பிரதமர் மோடி தான், மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

– கரு. நாகராஜன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories