மோடியின் வேலை Vs மோடிமஸ்தான் வேலை!

Rahul Gandhi Narendra Modi - 2026

போகாத ஊருக்கு வழி சொல்கிறார் ராகுல். சுவிட்சர்லாந்தில், வேலை, வருமானம் இல்லாத, 12 சதவீதம் பேருக்கு, ஆண்டுக்கு, 30 ஆயிரம், ‘யூரோ’வை, அந்நாட்டு அரசு வழங்கியது. இது, இந்திய ரூபாயில், 23.38 லட்சம். உதவி பெற்றவர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை; சோம்பேறிகளாகி, வீடுகளில் முடங்கினர்; போதை பழக்கத்திற்கு அடிமையாகினர். இது தொடர்பான ஓட்டெடுப்பில், திட்டத்தை செயல்படுத்த, 88 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்; பின்னர் திட்டம் கைவிடப்பட்டது.

இங்கிலாந்தில், 18 வயதுக்கு மேற்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு, மாதம், 450 ‘பவுண்டு’ வழங்கப்பட்டது. இது இந்திய ரூபாயில் 41 ஆயிரம். இளைஞர்களும், இளம் பெண்களும் உல்லாசமாக வாழ்ந்தனர்; எதிர்கால லட்சியம், முன்னேற்றத்தை மறந்து, சோம்பேறிகளாக மாறி விட்டனர்.

ஆனால், பிரதமர் மோடி அப்படியில்லை. அனைவருக்கும் வீடு, ஒரு ரூபாயில், இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு, ஓய்வூதியம், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை திட்டத்தை செயல்படுத்தினார். மேலும், 12 கோடி விவசாயிகளுக்கு, நாற்று நடவும், உரம் வாங்கவும், அறுவடை செய்வதற்கும் என ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்திட்டத்தை அமல்படுத்தினார். வங்கியில் கடன் வாங்கி, திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, சுய தொழில் செய்து முன்னேறும் வேலை வாய்ப்புகளை, பிரதமர் மோடி உருவாக்கி கொடுத்துள்ளார்.

ஆனால், மாதம், 6,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாயை இலவசமாக வழங்கி, மக்களை வேலைக்கு செல்லாமல், வீட்டில் முடக்கி வைக்கும் திட்டத்தை, ராகுல் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்தினால் பணவீக்கம் ஏற்படும்; மானிய திட்டங்களை நிறுத்தும் நிலை உருவாகும். அதற்கு பதிலாக, 3.6 லட்சம் கோடி ரூபாயில், நீர் ஆதாரங்களை மேம்படுத்துவேன்; நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் என, அறிவித்திருந்தால் வரவேற்கலாம். பிரதமர் வேட்பாளராக, ராகுலை வட மாநில மக்கள் ஏற்கவில்லை…

எனவே, போகாத ஊருக்கு வழி செல்வது போல, பொய்யான, சாத்தியமில்லாத வாக்குறுதிகளை ராகுல் அறிவித்து, மக்கள் மனதில் இடம் பெற முற்படுகிறார். அவரது எண்ணம் நிறைவேறாது. நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும், பிரதமர் மோடி தான், மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

– கரு. நாகராஜன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories