December 6, 2025, 12:54 AM
26 C
Chennai

காங்கிரஸ் வென்றால் திமுக ஆட்சியாம்! புறவாசல் வழியே வரத் துடிக்கும் வெட்கங்கெட்ட ஸ்டாலின்!

stalin veeramani speech - 2025

பதவி – ஊழல் இது தான் திமுகவின் சொல்லப்படாத தேர்தல் அறிக்கை.

வர வர பதவி கிடைக்காத வெறுப்பில் ஸ்டாலினின் பிதற்றல்கள் அதிகரித்து கொண்டேயிருக்கின்றது. அதற்கு சமீபத்திய உதாரணம் பிரதமர் ஏழை தாயின் மகன் என பிதற்று கின்றாராம்.

பிரதமர் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்துள்ளதை அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. அடிக்கடி தான் கலைஞரின் மகன் என சொல்லும் ஸ்டாலின், தான் விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிந்தவரின் மகன் என சொல்ல தயாரா?

அதைப்போல அவர் முதல்வர், துணை முதல்வரையும் வசை பாடுவதை தவறாமல் செய்து வருகிறார்.

அவருக்கு ஒரு கேள்வி, உங்கள் தந்தையின் செல்வாக்கில் கட்சித் தலைவரான உங்களுக்கு திமுகவில் உண்மையாக பணிபுரிந்து உயர வேண்டும் என எண்ணுவோருக்கு திமுக என்ன வாய்ப்பளித்தது?

திமுகவில் மாவட்ட செயலாளர்கள் எனும் குறுநில மன்னர்களின் வாரிசுகளுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் சீட் வழங்கும் திமுக ஏதேனும் ஓர் ஏழைத்தாயின் மகனுக்கு கருணாநிதி தலைமைக்கு வந்த பிறகு வழங்கியதுண்டா? தேர்தல் நேர்காணல் எனும் பகல் கொள்ளையில் எத்தனை செலவு செய்ய முடியும் எனும் கேள்வி தான் தவறாமல் இடம் பெறுகிறது.

தனக்கு பதவி கிடைக்கவில்லை எனும் தனது இயலாமையால் ஏழை மக்களை கொச்சைப்படுத்துவதை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பதவி எனும் வெறியில் பேசப்படும் பிதற்றல்கள் பணத்தாசையை தான் காட்டுகிறது.

5 முறை ஆண்ட திமுக… ஊழலால் உள்நாட்டு பாதுகாப்பை கோட்டை விட்ட திமுக… தினம் தோறும் விரைவில் திமுக ஆட்சி என பேசி பதவி ஆசையை வெளிகாட்டி வெற்று பிரச்சாரம் செய்யும் ஸ்டாலினுக்கு மக்கள் நல திட்டங்களை முன்னிறுத்தி செய்த சாதனைகளை சொல்லிக் காண்பித்து பிரச்சாரம் செய்யும் பிரதமரைக் கண்டால் ஏளனமாகத்தான் தெரியும்

ஏனெனில் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும், பதவி, ஊழல் என சிந்திக்கும் திமுகவிற்கு ஏழைகள் முன்னேற்றம் குறித்து என்ன அக்கறை இருக்கப் போகிறது?

வெற்றுப் பேச்சு பேசுவோர் மத்தியில் இலக்கு வைத்து செயல்படும் பிரதமர் ஏழை மக்கள் மட்டுமல்ல இந்த தேசத்தை முன்னேற்றுவார் என்ற கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் தமிழகத்தில் உடனே திமுக ஆட்சிக்கு வரும் என வெட்கமே இல்லாமல் பேசும் ஸ்டாலின் புறவாசல் வழியாக பாஜக ஆட்சி புரிகிறது என விமர்சிக்க தகுதியேயில்லை என யாராவது அவரிடம் சொன்னால் நலம்.

– ஆனந்த் பரத்வாஜ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories