December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

என்னாச்சு இங்கிலாந்துக்கு? 5 டக் அவுட்! 58 ரன்னில் சுருண்டு ‘ஒலக மகா சாதனை’ படைத்து…!

england newzealand - 2025

கிரிக்கெட் நேஷன், கிரிக்கெட் தோன்றிய நாடு, இங்க்லீஷ் விளையாட்டு என்றெல்லாம் பெயர் வாங்கி தனக்கேயான ஒரு வரலாறைக் கொண்டிருந்த இங்கிலாந்து, இப்போது ஒரு மோசமான சாதனையைப் படைத்து வரலாற்றில் இடம்பிடித்து விட்டது.

போல்ட், டிம் சௌதி இருவரும் ‘நாங்களே போதும்’ என இங்கிலாந்து அணியை சுருட்டி மோசமான சாதனையை இங்கிலாந்து படைக்கக் காரணமாகிவிட்டார்கள்!

இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதல் பகல் – இரவு டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 58 ரன்னில் சுருண்டது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை இது மோசமான சாதனை தான். ஆனால், அதையும் விட மோசமான சாதனையும் இந்த அணி இன்று படைத்தது. அது என்னவென்றால்… டக் அவுட் சாதனைதான்!

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ‘நாங்களே முதலில் பேட் செய்ய வேண்டும் என்று தான் விரும்பினோம்’ என்று கூறினார். ஆனால், அது எவ்வளவு பெரிய அபத்தம் என்று சாதனைகளைப்படைத்த பின்னர்தான் அவருக்கே புரிந்தது.

இந்நிலையில், பேட்டிங் செய்ய தயாராக இருந்த இங்கிலாந்து அணி களமிறங்கியது… களம் இறங்கியது… களம் இறங்கியதுதான்! நியூஸிலாந்தின் ஆக்ரோஷ பந்துவீச்சில் நிலை குலைந்து போனது. இங்கிலாந்தின் 11 பேட்ஸ்மேன்களில் 2 பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். கேப்டன் ரூட் உட்பட ஐந்து பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

நியூஸியின் பிரதான ஃபேஸ் பவுலர்கள் போல்ட் மற்றும் டிம் சௌதி இருவரும், அட நாங்களே போதும் பாத்துக்கிறோம் என்று, இங்கிலாந்தை 58 ரன்னில் சுருட்டி விட்டனர். இதில் 6 விக்கெட்டுகள் போல்ட்டுக்கும், 4 விக்கெட்டுகள் சௌதிக்கும் கிடைத்தன. 6-1, 6-2, 16-3, 18-4, 18-5, 18-6, 23-7, 23-8, 27-9, 58- ஆல் அவுட்! இதுதான் விக்கெட் வீழ்ந்த வரலாறு!

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி, 69 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணியின் 6-வது குறைந்தபட்ச ஸ்கோர் இது. முன்பு, 1887ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 45 ரன்னில் சுருண்டதே இதுவரையில் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. 1955இல், 26 ரன்னில் நியூசிலாந்து அணி சுருண்டதே டெஸ்டில் அரங்கில் ஒரு அணியின் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர்.

இன்றைய போட்டியின் போது, 27-9 என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து. இறுதிக் கட்டத்தில் கிரெய்க் ஓவர்டன், 25 பந்தில் 33 ரன்கள் எடுத்ததால், இரண்டாவது மோசமான டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோரை படைக்கும் மோசமான பட்டியலில் இடம்பெறாமல் தப்பியது இங்கிலாந்து!

அடுத்த சாதனை… இதற்கு முன், இங்கிலாந்து பவுலிங் கூட்டணி படைத்த சாதனையை, நியூசி., பவுலிங் கூட்டணி தகர்த்ததுதான். கடந்த 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் 2 பவுலர்கள் சேர்ந்து எதிரணியை ஒருமுறை மட்டுமே ஆல் அவுட் செய்தனர். 2013ம் ஆண்டு, இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூட்டணி, லார்ட்ஸில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 22.3 ஓவரில் 68 ரன்களுக்கு எதிரணியை சுருட்டியது.

தற்போது ஐந்து வருடங்கள் கழித்து, போல்ட் மற்றும் சௌதி கூட்டணி, இங்கிலாந்து அணியை 20.4 ஓவரில் 58 ரன்களுக்கு சுருட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories