பப்புவா நியூகினியாவின் ஆளுநர் ஒரு நெல்லைத் தமிழர்!

sasindran muthuvel papua new guinea 1 - 2026

பாப்புவா நியூகினியில் நம் தமிழர் ஓர் ஆளுநர்! பாப்புவா நியூகினி ஒரு தீவுக் கூட்டம்! அது எங்கிருக்கிறது?

உலகப் பட உருண்டையை சுழற்றுங்கள்! வட பசிஃபிக் பெருங் கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் விரிந்து பரந்து மல்லாக்கப் படுத்துக் கிடக்கும் பசுமைப் பூமி ஒன்று தெரியும். ஸ்டாப் !,அது தான் பாப்புவா நியூகினி!).

தென் கிழக்காசிய நாடுகளின் ஆதிவாசி மக்கள் கூடிக் குடிபெயர்ந்த இயற்கை வடியும் தீவு நாடு இது. வாழ்வாதாரங்களுடன் வாழும் மக்கள்-திரும்பிய பக்கமெல்லாம் நில வளம்-நீர் வளம்- வீட்டுக்கு வீடு உழைப்பாளிகள்! அண்மையக் காலங்களில் ஜனநாயக நாடாக மலர்ந்துள்ளது பாபுவா நியூகினி.

அந் நாட்டிலிருந்து வெஸ்ட் நியூ பிரிட்டன் மாநில அரசின் கவர்னர், சென்ற வாரம் சிங்கப்பூர் வந்தபோது என்னை சந்தித்துப் பழகிச் சென்றார். அவர் என் நெருங்கிய நண்பர். வெஸ்ட் பிரிட்டன் மாநிலம், சிங்கப்பூரைப் போல் 55 மடங்கு பெரியது-மக்கள் தொகை பல லட்சத்திற்கும் மேல். தமிழக முதல்வருக்கு சமமான தகுதி இந்தக் கவர்னர் பதவி.

sasindran muthuvel papua new guinea - 2026

பாப்புவா நியூ கினியி ன் ஒரு மானிலமான வெஸ்ட் பிரிட்டனின் இந்தப் பெருமைக்குரிய ஆளுநர் யார்? ஒரு முழுமையான தமிழர். சசிந்த்ரன் முத்துவேல் தான் அந்த மகத்தான மனிதர். அப்படி ஒன்றும் தள்ளாடும் வயதில்லை. இருபதாண்டுகளுக்கு முன் ஒரு கடை நிர்வாகியாகப்பணி செய்யப் போன விருதுநகரைச் சேர்ந்த சசீந்த்ரன், தன் நாணயத்தால், உள்னாட்டு மக்களுடன் பழகிய நம்பிக்கையால், தனி ஒரு தமிழனாக இருந்து, முற்றிலும் மாறுபட்ட குடி மக்களால், அவர்களையே ஆளும் கவர்னராக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இரண்டாம் முறையாக கவர்னராகத் தேர்வு பெற்று, உள்ளூர் மக்களின் குறைகளை பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறி, பல மில்லியன் பட்ஜெட் தொகையை மானில வளர்ச்சிகளுக்கு செலவு செய்து மக்களின் பேரதரவுடன் இருந்து வரும் திரு.சசீந்த்ரன், நாட்டின் ஆதி மொழிகளை ஆற்றலுடன் பேசக் கூடியவர். ஆங்கிலச் சரளம் அவருக்கு போனஸ்!

இன்னொரு தகவல் ஆளுநர் சசீந்திரன் தமிழை மறக்காதவர். மனைவி,குழந்தைகள் இல்லத்தில் தமிழில் மட்டுமே பேசும் பழக்கத்தினர். அண்மையில் ’சிங்கையில் ‘ தமிழும் தமிழரும்’ என்கிற என் நூல் சிங்கப்பூரில் வெளியானபோது, திருமதி சசிந்திரன் அந் நிகழ்ச்சிக்காகவே வந்திருந்து சிறப்பித்தார்.

காமராஜர் பிறந்த ஊரில் பிறந்ததைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் ஆளுநர் சசீந்திரன், அவருடைய நேர்மைக் குணத்தை நெஞ்சில் இருத்தி வாழ்வதாகக் குறிப்பிட்டார். மீன், இறைச்சி உணவுகளுக்குப் பஞசமில்லாத அந்த நீர்வள நாட்டில், சைவ வகை உணவுகளை மட்டுமே உண்டு வாழ்வதாகக் குறிப்பிட்டபோது, நான் வியந்து தடுமாறினேன். அக் குடும்பத்தினருக்கு என் நல்வாழ்த்துகள்!

-ஏ.பி.ஆர். @ ஏ.பி.ராமன், சிங்கப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories