December 5, 2025, 6:16 PM
26.7 C
Chennai

பப்புவா நியூகினியாவின் ஆளுநர் ஒரு நெல்லைத் தமிழர்!

sasindran muthuvel papua new guinea 1 - 2025

பாப்புவா நியூகினியில் நம் தமிழர் ஓர் ஆளுநர்! பாப்புவா நியூகினி ஒரு தீவுக் கூட்டம்! அது எங்கிருக்கிறது?

உலகப் பட உருண்டையை சுழற்றுங்கள்! வட பசிஃபிக் பெருங் கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் விரிந்து பரந்து மல்லாக்கப் படுத்துக் கிடக்கும் பசுமைப் பூமி ஒன்று தெரியும். ஸ்டாப் !,அது தான் பாப்புவா நியூகினி!).

தென் கிழக்காசிய நாடுகளின் ஆதிவாசி மக்கள் கூடிக் குடிபெயர்ந்த இயற்கை வடியும் தீவு நாடு இது. வாழ்வாதாரங்களுடன் வாழும் மக்கள்-திரும்பிய பக்கமெல்லாம் நில வளம்-நீர் வளம்- வீட்டுக்கு வீடு உழைப்பாளிகள்! அண்மையக் காலங்களில் ஜனநாயக நாடாக மலர்ந்துள்ளது பாபுவா நியூகினி.

அந் நாட்டிலிருந்து வெஸ்ட் நியூ பிரிட்டன் மாநில அரசின் கவர்னர், சென்ற வாரம் சிங்கப்பூர் வந்தபோது என்னை சந்தித்துப் பழகிச் சென்றார். அவர் என் நெருங்கிய நண்பர். வெஸ்ட் பிரிட்டன் மாநிலம், சிங்கப்பூரைப் போல் 55 மடங்கு பெரியது-மக்கள் தொகை பல லட்சத்திற்கும் மேல். தமிழக முதல்வருக்கு சமமான தகுதி இந்தக் கவர்னர் பதவி.

sasindran muthuvel papua new guinea - 2025

பாப்புவா நியூ கினியி ன் ஒரு மானிலமான வெஸ்ட் பிரிட்டனின் இந்தப் பெருமைக்குரிய ஆளுநர் யார்? ஒரு முழுமையான தமிழர். சசிந்த்ரன் முத்துவேல் தான் அந்த மகத்தான மனிதர். அப்படி ஒன்றும் தள்ளாடும் வயதில்லை. இருபதாண்டுகளுக்கு முன் ஒரு கடை நிர்வாகியாகப்பணி செய்யப் போன விருதுநகரைச் சேர்ந்த சசீந்த்ரன், தன் நாணயத்தால், உள்னாட்டு மக்களுடன் பழகிய நம்பிக்கையால், தனி ஒரு தமிழனாக இருந்து, முற்றிலும் மாறுபட்ட குடி மக்களால், அவர்களையே ஆளும் கவர்னராக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இரண்டாம் முறையாக கவர்னராகத் தேர்வு பெற்று, உள்ளூர் மக்களின் குறைகளை பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறி, பல மில்லியன் பட்ஜெட் தொகையை மானில வளர்ச்சிகளுக்கு செலவு செய்து மக்களின் பேரதரவுடன் இருந்து வரும் திரு.சசீந்த்ரன், நாட்டின் ஆதி மொழிகளை ஆற்றலுடன் பேசக் கூடியவர். ஆங்கிலச் சரளம் அவருக்கு போனஸ்!

இன்னொரு தகவல் ஆளுநர் சசீந்திரன் தமிழை மறக்காதவர். மனைவி,குழந்தைகள் இல்லத்தில் தமிழில் மட்டுமே பேசும் பழக்கத்தினர். அண்மையில் ’சிங்கையில் ‘ தமிழும் தமிழரும்’ என்கிற என் நூல் சிங்கப்பூரில் வெளியானபோது, திருமதி சசிந்திரன் அந் நிகழ்ச்சிக்காகவே வந்திருந்து சிறப்பித்தார்.

காமராஜர் பிறந்த ஊரில் பிறந்ததைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் ஆளுநர் சசீந்திரன், அவருடைய நேர்மைக் குணத்தை நெஞ்சில் இருத்தி வாழ்வதாகக் குறிப்பிட்டார். மீன், இறைச்சி உணவுகளுக்குப் பஞசமில்லாத அந்த நீர்வள நாட்டில், சைவ வகை உணவுகளை மட்டுமே உண்டு வாழ்வதாகக் குறிப்பிட்டபோது, நான் வியந்து தடுமாறினேன். அக் குடும்பத்தினருக்கு என் நல்வாழ்த்துகள்!

-ஏ.பி.ஆர். @ ஏ.பி.ராமன், சிங்கப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories