ரேவா நதி தீரத்தில் ஜபம் செய்தால் அதிக பலன் என்கிறார்களே! அந்த நதி எங்குள்ளது?

Published:

samavedam pic - 2026

கேள்வி:- ரேவா நதீ தீரத்தில் மந்திர ஜபம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்களே!. அந்த நதி எங்குள்ளது கூறுவீர்களா? அங்கு தங்குவதற்கு வசதி சௌகர்யங்கள் உள்ளதா?

பதில்:- ‘ரேவா நதி’ என்பது நர்மதா நதியின் மற்றொரு பெயர். இந்த நதியின் அதிக பாகம் மத்திய பிரதேசத்தில் ஓடுகிறது. இதன் தீரத்தில் பல புண்ணிய க்ஷேத்திரங்கள் உள்ளன. ‘ஓம்கார மமலேஸ்வரம்” என்ற புகழ்பெற்ற ஜோதிர்லிங்கத் தலம் நர்மதா நதிக் கரையில் உள்ளது. இந்த தலத்தில் வசதி சௌகர்யங்களும் உள்ளன. நதியின் சிறப்பும் தலத்தின் சிறப்பும் கொண்ட இந்த தலம் மிகவும் மகிமை வாய்ந்தது.

ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img