வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-22)

vantherikaL vambupracharam - 2026

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“Health system of India like Ayurveda etc., are not evidence based, but produce placebo effect. இந்தியாவின் ஆரோக்கிய சூத்திரங்களும், ஆயுர்வேத மருந்துகளும் ஆதாரமற்ற மருத்துவ முறைகள்!” என்று நம் பண்டைய மருத்துவ முறையை வந்தேறிகள் ஏளனம் செய்தனர்.

விஞ்ஞானம் வளர்ந்து வரும் போது முறைகேடான வாழ்க்கை முறையும் வளர்கிறது. ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த தேசிய மருத்துவமுறை அலட்சியத்துக்கு உள்ளானது.

பாதுக்காப்பான மூலிகைகளும் அரிதான ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை லடசியமாகக் கொண்டு அவதரித்த ஆயுர்வேத மருத்துவ முறையும் மக்களால் ஒதுக்கப்பட்டது.

“ஆயுர்வேத ப்ரயோஜனந்து ஸ்வஸ்தஸ்ய ஸ்வாஸ்த்ய லக்ஷணம் – ஆதுரஸ்ய விகார பிரஸமனம்”.

பொருள்: ஆரோக்கியமாக உள்ளவனின் ஆரோக்கியத்தை காப்பது, நோயாளிக்கு வந்த நோயை நீக்குவது இரண்டும் ஆயுர்வேதத்தின் பயன்கள்.

இப்போதும் நம்மிடையே வாழும் எண்பது, தொண்ணூறு வயது முதியவர்கள் நல்ல உடல் வலிமையோடு இருபதற்குக் காரணம் அவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, ஓய்வு, சுகாதாரமான வாழ்வியல் முறை.

ayurveda - 2026

முறைகேடான உணவுப் பழக்கமும் கேளிக்கைகளும் நோயாளிகளை உருவாக்குகிறது. மூலிகைகள், நாடி பார்த்து நோயைக் கண்டறியும் வழிமுறைகள், பாட்டி வைத்தியம் போன்றவை மறைந்து போயின.

அதன் பலனாக புதுப்புது நோய்களோடு, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பக்க விளைவுகளோடு கூடிய மருந்துகளை பயன்படுத்துவதால் உடல்நலம் கெடுகிறது.

‘பத்தியம்’ என்ற ஆரோக்கியப் பாதுக்காப்பு சூத்திரத்தை மருத்துவர்களே ஏளனம் செய்வதால் சமுதாயத்தில் நோயாளிகள் அதிகமாகியுள்ளனர். நோய்களை உருவாக்கும் மருந்துகளை மக்கள் எக்கச்சக்கமாக உபயோகிக்கின்றனர்.

‘முழுமையான உடல்நலப் பாதுக்காப்பு’ என்பதற்கு பதில் ‘நோய் அறிகுறிக்கு சிகிச்சை’ என்ற முறை பெருகிவருகிறது. ‘சமையலறை’ முதல் சிகிச்சை மையமாக இருந்த நிலைமை மாறி எல்லாவற்றுக்கும் மருத்துக் கடைகளை நாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொழில்துறைத் தேவைகளை முன்னிறுத்தும் மருத்துவ முறையால் உடல்நலம் பொருளாதாரப் பிரச்சனையாகி விட்டது. ஸ்டார் மருத்துவம், மருந்துக் கம்பெனிகள், அவற்றால் பெருகும் சுற்றுச்சூழல் மாசு… என்று ஒரு விஷ வளையத்தில் உலகம் தள்ளாடுகிறது.

இனியாவது உடல்நலனைப் பேணும் பல்வேறு மருத்துவ முறைகளையும் சமன்வயம் செய்து அனைவருக்கும் குறைந்த விலையில் நலன் விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.


Source: ருஷிபீடம் அக்டோபர் 2018\


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories