தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“Health system of India like Ayurveda etc., are not evidence based, but produce placebo effect. இந்தியாவின் ஆரோக்கிய சூத்திரங்களும், ஆயுர்வேத மருந்துகளும் ஆதாரமற்ற மருத்துவ முறைகள்!” என்று நம் பண்டைய மருத்துவ முறையை வந்தேறிகள் ஏளனம் செய்தனர்.
விஞ்ஞானம் வளர்ந்து வரும் போது முறைகேடான வாழ்க்கை முறையும் வளர்கிறது. ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த தேசிய மருத்துவமுறை அலட்சியத்துக்கு உள்ளானது.
பாதுக்காப்பான மூலிகைகளும் அரிதான ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை லடசியமாகக் கொண்டு அவதரித்த ஆயுர்வேத மருத்துவ முறையும் மக்களால் ஒதுக்கப்பட்டது.
“ஆயுர்வேத ப்ரயோஜனந்து ஸ்வஸ்தஸ்ய ஸ்வாஸ்த்ய லக்ஷணம் – ஆதுரஸ்ய விகார பிரஸமனம்”.
பொருள்: ஆரோக்கியமாக உள்ளவனின் ஆரோக்கியத்தை காப்பது, நோயாளிக்கு வந்த நோயை நீக்குவது இரண்டும் ஆயுர்வேதத்தின் பயன்கள்.
இப்போதும் நம்மிடையே வாழும் எண்பது, தொண்ணூறு வயது முதியவர்கள் நல்ல உடல் வலிமையோடு இருபதற்குக் காரணம் அவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, ஓய்வு, சுகாதாரமான வாழ்வியல் முறை.
முறைகேடான உணவுப் பழக்கமும் கேளிக்கைகளும் நோயாளிகளை உருவாக்குகிறது. மூலிகைகள், நாடி பார்த்து நோயைக் கண்டறியும் வழிமுறைகள், பாட்டி வைத்தியம் போன்றவை மறைந்து போயின.
அதன் பலனாக புதுப்புது நோய்களோடு, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பக்க விளைவுகளோடு கூடிய மருந்துகளை பயன்படுத்துவதால் உடல்நலம் கெடுகிறது.
‘பத்தியம்’ என்ற ஆரோக்கியப் பாதுக்காப்பு சூத்திரத்தை மருத்துவர்களே ஏளனம் செய்வதால் சமுதாயத்தில் நோயாளிகள் அதிகமாகியுள்ளனர். நோய்களை உருவாக்கும் மருந்துகளை மக்கள் எக்கச்சக்கமாக உபயோகிக்கின்றனர்.
‘முழுமையான உடல்நலப் பாதுக்காப்பு’ என்பதற்கு பதில் ‘நோய் அறிகுறிக்கு சிகிச்சை’ என்ற முறை பெருகிவருகிறது. ‘சமையலறை’ முதல் சிகிச்சை மையமாக இருந்த நிலைமை மாறி எல்லாவற்றுக்கும் மருத்துக் கடைகளை நாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொழில்துறைத் தேவைகளை முன்னிறுத்தும் மருத்துவ முறையால் உடல்நலம் பொருளாதாரப் பிரச்சனையாகி விட்டது. ஸ்டார் மருத்துவம், மருந்துக் கம்பெனிகள், அவற்றால் பெருகும் சுற்றுச்சூழல் மாசு… என்று ஒரு விஷ வளையத்தில் உலகம் தள்ளாடுகிறது.
இனியாவது உடல்நலனைப் பேணும் பல்வேறு மருத்துவ முறைகளையும் சமன்வயம் செய்து அனைவருக்கும் குறைந்த விலையில் நலன் விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
Source: ருஷிபீடம் அக்டோபர் 2018\