மிதி வண்டியில் தெரியுது மீதி வாழ்க்கையின் வெளிச்சக் கீற்று!

Published:

bycycle - 2026

மாதத் தவணையில் எப்படியாவது பெரிய கார் வாங்கி உலா வரலாம் என்று நினைப்பவர்களின் பார்வைக்கு….

இந்த படத்தில் உள்ள மிதிவண்டியும், அதனுடைய காட்சிகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம்.

வெளிநாடுகளுக்கு சென்றால் அந்த நாட்டிலுள்ள முக்கியப் பல்கலைக்கழகங்களுக்கு செல்வது என் வாடிக்கை. ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், யேல், மெல்போர்ன் போன்ற பல்கலைக்கழகங்களில் யாரும் அதிகமாக நாம் பயன்படுத்துகின்ற இருசக்கர மோட்டார் வாகனங்களையோ, கார்களையோ அதிகம் பயன்படுத்துவதில்லை.

அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களே அமைதியாக மிதிவண்டியில் வருவதை தான் விரும்புகிறார்கள். மிதிவண்டியில் வருவது உடம்புக்கும் நல்லது, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லை. கடுமையான ஏர்காரன் ஒலி காதுகளைத் துளைக்காது. இப்படித்தான் வெளிநாட்டவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் சைக்கிளில் பயணிப்பதை விரும்புகின்றனர்.

ஆனால் நம் நாட்டில் ஒருவர் மட்டும் பயணிக்க 7 அடிக்கு ஒரு பெரிய காரையும், அதையும் மாதத் தவணையில் கடனில் வாங்கி, கேட்டாலே ரணத்தை தரும் ஏர்காரனை அடித்துக் கொண்டு போவது தான் செல்வாக்கு, ஆளுமை என்று நம்மிடம் போலியான போக்கு பரவியுள்ளது.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

எளிமையே அழகு என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். இந்த காட்சியை பார்க்கையிலே அமைதியான ஒரு அழகு இருக்கிறது. இந்த மிதிவண்டியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தேர்வு கண்காணிப்பாளர் (COE) பயன்படுத்துகிறார். நம் நாட்டில் இத்தகைய பொறுப்பில் உள்ளவர்கள் பெரிய இன்னோவா காரில் ஆர்ப்பாட்டமாக வந்து இறங்குவார்.

ஏனெனில் நாம் போலிகளையும், பாசாங்குகளையும் கொண்டாடுகிறோம். அதை கொண்டே நம்மை நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்.

#ஆக்ஸ்போர்டு_பல்கலைக்கழகம் #Oxford_University

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img