இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் திருநாவுக்கரசரா ? ஏசுவா?

Published:

thirunavukkarasu nayanar - 2026

திருநாவுக்கரசர் மற்றும் ஏசுநாதர் இருவர் வாழ்வையும் நாம் ஒப்பீடு செய்து பார்க்கின்றோம்.

இறைவனை என் தந்தையே என்று அழைத்த நாவுக்கரசர், மூன்று மரண தண்டனைகளிலிருந்தும் இறைவனால் காப்பாற்றப்பட்டார். உயிர்த்தெழுந்தார். 80 வயது வரை தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்து இந்து மதத்தைப் பரப்பினார்.

இறைவனால் உயிர்த்தெழுந்ததற்கு தானே சாட்சியாக விளங்கினார். இது கி.பி. 9ம் நூற்றாண்டில் நடந்தது. ஆனால் ஆண்டின் தொடக்கத்தில் ஆண்டவனை பரலோகத்தில் இருக்கும் பிதாவே என்று அழைத்த ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதும் இறந்து விட்டார்.

அவரின் சீடர்கள் கண்களுக்கு மட்டும் அவர் பேயாக வந்து சைத்தானாக காட்சி அளித்தாக அவர்கள் கூறுகின்றார்கள்.

மற்றவர்கள் கண்ணுக்கு திருநாவுக்கரசரைப் போல வெளிப்படையாக இறை சக்தியை அவரால் நிரூபிக்க முடியவில்லை. காரணம் கடவுளால் அவர் கைவிடப்பட்டார்.

அதனால்தான் இன்றும் கடவுளுக்கு படைத்ததை’ நாம் கிறிஸ்தவர்களுக்கு கொடுத்தால் அதை வாங்கி உண்ண மாட்டார்கள்.’ காரணம் “கடவுள் பக்கம் பேய், பிசாசு நெருங்காது” என்பதற்கு இது மிகப் பெரிய ஆதாரம்.

ஆனால், நடைமுறையில் கடவுளை வணங்கும் இந்துக்களை அவர்கள் எது சைத்தான் என்று புரியாமல் நாம் வணங்குவது சைத்தான் என்று சொல்லுகின்றார்கள்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏசுநாதர் சைத்தான் இல்லை என்றால் திருநாவுக்கரசரைப் போல நீண்ட காலம் வாழ்ந்து நிரூபிக்க வேண்டியதுதானே…? அல்லது இறைவனால் ஏசு நாதர் கைவிடப்பட்டதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே…இன்று.

திருநாவுக்கரசர் எழுதிய தேவாரம் அவரே எழுதினார்.

ஆனால் பைபிளை பல பேர் எழுதினார்கள். பலவிதமாக எழுதினார்கள். ஆக இதில் உள்ள வசனங்களுக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பதில் அவர்களுக்குள் மிகப்பெரிய போராட்டம் நடப்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

மதுரைக்கு திருஞானசம்பந்தர் இந்து மதத்தைப் பரப்புவதற்காக புறப்பட்ட சமயம், அந்த நாடு முழுவதும் சமண மதமாக இருந்தது. அரசி மங்கையர்கரசியும் மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே இந்துக்கள். அதுவும் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலையில் இருந்தார்கள்.

இதுபோல நிலையில் ஏசுநாதர் தனக்கு எதிரான நிலை நாட்டில் நிலவியதுபோது இறையருள் இருந்தால் அங்கேயே நிரூபித்து மதம் மாற்றியிருக்க வேண்டும்.

ஆனால் இறையருள் இல்லாததால் நாட்டை விட்டு வெளியேறி ஒளிந்தார். அவருடைய சீடன் லூத்தாஸ் அவரை காட்டிக் கொடுத்தார். தன்னுடைய சீடன் காட்டிக் கொடுக்கக் கூடியவனா? இல்லையா? என்றே தெரிந்து கொள்ள முடியாத ஏசுவால் எப்படி இறைவனை தெரிந்து கொள்ள முடிந்திருக்கும்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

அவ்வாறு அவர் கடவுள் பக்தி உள்ளவர் அல்ல என்பதால் இறைவன் சிலுவையில் அறைந்தபோது அவரை கைவிட்டார்.

ஆனால் திருஞானசம்பந்தர் தன் மதத்திற்கு எதிரான மதம் உள்ள இடத்தில் தன் மதத்தை பரப்ப எதிர்ப்பவர்கள் முன்பு இறைவன் தன் பக்கம் இருக்கின்றான் என்பதை நிரூபிக்க சென்றார்.

அவர் மதுரையில் தங்கிய மடத்திற்கு சமணர்கள் மன்னர் ஆதரவோடு அன்று இரவே தீ வைத்தனர். அப்போது அதனை கண்டு அஞ்சாத கடவுள் அடியார் திருஞானசம்பந்தர்,

‘‘பையவே சென்று பாண்டியற்கு ஏகுக’’ என்று பாடினார்.
அதனால் அந்த வெப்பம் ஞானசம்பந்தரை ஒன்றும் செய்யவில்லை. மாறாக, தீ வைப்பதற்கு காரணமான பாண்டிய மன்னனுக்கு வெப்புநோய் உண்டானது.
அந்த நோயை மன்னனின் மதமான சமண மதத்தவர் தீர்க்க இயலவில்லை.

இறையருள் பெற்ற இந்து சமய துறவி திருஞானசம்பந்தர்
‘‘மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு’’
என்ற இன்றும் உள்ள தேவாரப் பாடல் பத்து பாடி கூன் பாண்டியனின் வெப்பு நோயைப் போக்கினார்.

அத்துடன் கூன் பாண்டியனின் கூன்நிமிர்ந்து அவன் நின்றசீர் நெடுமாறன் என்று பெயர் பெற்றான்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

இதே கட்டத்தில் இறையருள் பெற்றிருந்தால் ஏசுநாதர் தனக்கு மரண தண்டனை விதித்த மன்னன் முன்பு தான் இறையருள் பெற்றவன் என்னை கொல்ல முடியாது என்று தன்னுடைய கடவுள் பக்தியை நிரூபித்து அந்த மன்னனை மனம் மாற்ற முடியவில்லை.

ஆனால் அவரை கடவுள் என்று சொல்லி பிரசாரம் செய்து இன்று பொய்யான கடவுள் கொள்கையை பரப்புகின்றார்கள். அவர்கள் முன்பு நம்முடைய மத உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்துவுக்கும் இந்திய மண்ணின் மைந்தர்கள் யாவர்க்கும் உண்டு.

நீங்கள் திருநாவுக்கரசாக, திருஞானசம்பந்தராக, அவருடைய வழிதோன்றல்களாக இருந்து இந்து மதத்தை உணர்ந்து உலகுக்கு , உணர்வுடன் பரப்பினால் அவர்களைப் போல சிவபெருமானின் அருள் உங்களுக்கும் கிடைக்கும்..

  • சைவ நெறி அன்பன்

Related articles

Recent articles

spot_img