February 23, 2026, 11:14 AM
29.4 C
Chennai

சமையல் டிப்ஸ் நல்லா யூஸ் பண்ணிக்கோங்க !

samaiyal tips - 2026இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது  ஃபிரிட்ஜ் வாட்டர் ஊத்தி அரைங்க. மாவு நல்லா பொங்கி வரும்.

இட்லிமாவு புளிச்சு போச்சுன்னா மாவுல ஒரு ரெண்டு சொம்பு தண்ணி ஊத்தி நல்லா கலக்குங்க. அந்த பாத்திரத்தை அப்படியேவெச்சு இருந்து ஒரு பத்து பதினைஞ்சு நிமிசம் கழிச்சு மேல நிக்கற தண்ணிய மட்டும் வடிச்சுட்டுதோசை ஊத்தினா நமக்கு புளிக்காத தோசை ரெடி. இல்லை என்னால அத்தனைநேரம் வெயிட் செய்யமுடியாதுன்னு சொல்ற அவசர பார்ட்டியா? ஒரு அரைடம்ளர் பாலு சேர்த்து கலக்கி ஊத்துங்க. இப்ப புளிப்பு கம்மியாகி வாயில வெக்கலாம் ரேஞ்சுக்கு இருக்கும்.

சப்பாத்திமிருதுவா இருக்கணுமா? சூடு தண்ணியும் பாலும் ஊத்தி பிசைய
சொல்லுங்க. சப்பாத்திநிறைய மீதியாகி போச்சா. மொட்டை மாடில கொண்டு போயி
அதை காய வைங்க. அது காஞ்சுஉடையற மாதிரி ஆனவுடன் எண்ணெய்ல பொரிச்சு
சாப்பிட்டு பாருங்க. தோசையையும் இதே மாதிரி உபயோக படுத்தலாம்.

கஷ்டப்பட்டு நாம வெண்பொங்கல் செஞ்சு தருவோம். நம்ம குழந்தைங்க அதுல
இருக்கற மிளகை மட்டும் தனியா எடுத்து வெச்சு இருப்பாங்க. மிளகு உடம்புக்கு ரொம்பநல்லதாச்சே. அதனால பொங்கல் செய்யும் போது மிளகை லேசா
வறுத்துபொடி செஞ்சு போடுங்க.

பிஸ்கட்டுகள் நமுத்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில்சிறிது சர்க்கரை போட்டு, மூட்டை போல் கட்டி, பிஸ்கட் டப்பாவில் போட்டு விடுங்கள்.

பேகான் ஸ்பிரே பாட்டிலுக்குள், ஊதுபத்தியை போட்டு எடுத்து,ஏற்றி வைத்தால், கொசுக்கள், பூச்சிகள் அண்டாது.

சர்க்கரையுடன் ஒன்றிரண்டு கிராம்புத் துண்டுகள் போட்டால், எறும்பு வராது.

கறிவேப்பிலை இலைகளை அரிசியுடன் போட்டு வைத்தால், பூச்சிகள்,வண்டுகள் எட்டிக் கூட பார்க்காது.

வெயில் காலத்தில் பால் திரிந்து போகாமல் இருக்க, பாலுடன் நான்கைந்து நெல் விதைகளைப்  போட்டு வைக்கலாம்.

வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது.

பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால், தோலை எளிதில் உரிக்கலாம்.

பூண்டை எளிதில் உரிக்க இன்னொரு ஐடியா. பூண்டில் தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில்
அரைத்தால், தோல் அனைத்தும் மேலே எழும்பி, ஜாரின் மேற் புறத்தில் ஒட்டிக்
கொள்ளும். கீழேஉரித்த பூண்டு, மையாய் அரைந்திருக்கும். ஒரே நேரத்தில் இரு
வேலை!

சாம்பார், வற்றல் குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகிவிட்டால், நல்லெண்ணெயை ஊற்றி கொஞ்சம் கொதிக்க விடுங்கள்.காரம் குறைந்து விடும், குழம்பின் வாசனையும்
நன்றாக இருக்கும். ஆனால், குருமா போன்ற கிரேவியான ஐட்டங்களில் காரம் கூடினால், ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு கொதிக்க வையுங்கள். காரம்
குறைந்துவிடும்.

குழம்பில் புளி அதிகமாகி விட்டால், சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகி விடும்.

சாம்பாரில் சில சமயம் பருப்பு சேராமல் நீர்க்க இருக்கும். அப் போது துவரம்பருப்பு சிறிது எடுத்து மிக்சியில் அரைத்து சாம்பாரில் சேர்த்துநன்கு கொதிக்க விடுங்கள். சாம்பார் கெட்டியாகிவிடும்.அரிசி மாவு கரைத்து விடுவதை விட, இவ்வாறு
செய்வதுசாம்பாரின் ருசியை அதிகரிக்கும்.

ரோஸ்ட் செய்யும் கறிகளில், எண்ணெய் அதிகமாகிவிட்டால்,கறிகளின் மேல் ஒரு
டீஸ்பூன் அரிசி மாவை தூவினால், கறியின் எண்ணெயை அரிசிமாவு உறிஞ்சிக்
கொண்டு விடும்; கறியும் மொறு மொறுப்பாக இருக்கும். கடலை மாவும்
தூவலாம்.ஆனால், கடலை மாவு சுவையை கூட்டினாலும் கறிகளுக்குமொறுமொறுப்பை தராது.

பாயசம் நீர்த்துவிட்டால் எந்த பாயசமாக இருந்தாலும் சரி இரண்டு
டீஸ்பூன் சோளமாவு அல்லது பால் பவுடர் கரைத்து பாயசத்தில் ஊற்றி
இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டால் பாயசம் கெட்டியாகிவிடும்.

சாதம் வேகாமல் நறுக்கரிசியாக இருந்தால், சாதத்தின் மேல் சிறிது தண்ணீரை தெளித்து குக்கரில் வைக்கவும். ஆவி வந்ததும்,”வெயிட்’ போட்டு உடன் அணைத்து விடவும்.சத்தம் அடங்கியவுடன் குக்கரை திறந்தால் சாதம் பூவாக வெந்து இருக்கும்.

சில சமயங்களில் தண்ணீர் நன்றாக இல்லாவிட்டால், சாதம் நிறம் சற்று மங்கலாக இருக்கும். அப்போது அரிசி களைந்து குக்கரில் வைக்கும் போது சில சொட்டு எலுமிச்சை சாறு விட்டு வைத்தால், சாதம்பொலபொலவென்றும் வெண்மையாகவும் இருக்கும்.

ரசத்தில் புளி குறைந்துவிட்டால், கைவசம் மாங்காய் பொடி இருந்தால் போதும். 1/4 டீஸ்பூன் பொடி தேவையான புளிப்பை தந்துவிடும்.

தோசைமாவு, இட்லி மாவு மிகவும் புளித்துவிட்டால்,ஒரு டம்ளர் பால்
ஊற்றினால் போதும் புளிப்பை போக்கிவிடும்.

வாங்கி சில நாட்கள் ஆகிவிட்ட காலிபிளவர், முள்ளங்கி,முட்டைகோஸ், டர்னிப்
ஆகியவை செய்யும் போது மிகவும்சகிக்க முடியாத வாடை ஏற்படும். இதை தவிர்க்க,
சிறிது எலுமிச்சை சாறும், சர்க்கரையும் கலந்து சமைத்தால், மிகவும் சுவையாகவும்
மணமாகவும் இருக்கும்.

தயிர் பச்சடி நீர்த்துப் போய்விட்டால், சிறிது நிலக்கடலையை வறுத்து நைசாக பொடி
செய்து கலந்துவிடலாம். இதனால்,பச்சடி கெட்டியாவதோடு சுவையும், சத்தும் கூடும்.

கேரட், பீட்ரூட், முள்ளங்கி  ஆகியவை உடலுக்கு அதிகம் நன்மை பயப்பவை. இவற்றில் தோலை அரிந்து எறிந்து விடக்கூடாது. தோலுடன் சமைப்பதே
சிறந்த முறை.

கீரை வகைகள் வேகும் போது அதிலிருந்து ஒரு வித நச்சுக் காற்று
வெளியேறும்.எனவே, வேகும் போது மூடி போட்டு மூடக் கூடாது.அவ்வாறு மூடினால்
நச்சுக் காற்று கீரையிலேயே தங்கி உடலுக்கு கெடுதியைஉண்டு பண்ணும்.

அரிசி, தானிய வகைகளை அதிகளவில் நீரில் கழுவக் கூடாது.அதிலுள்ள தாதுக்கள்,
வைட்டமின்கள் தண்ணீரில் கரைந்துவிடும்.

தக்காளி சூப் செய்து நீண்ட நேரம் வைத்திருந்தால், அதுஅமிலத் தன்மை
உடையதாக மாறிவிடும். இதை தடுக்க சூப் இளஞ்சூடாகஇருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடாமாவு சேர்க்க வேண்டும்.

பருப்புகளை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது கடுகு
எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

உருளைக்கிழங்கை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது மஞ்சள்,எண்ணெய் சேர்த்து, வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப்
பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories