December 6, 2025, 8:12 AM
23.8 C
Chennai

பட்டர் பீன்ஸ்: ப்பா எத்தனை நோய்க்கு மருந்து தெரியுமா?

soya bins

பட்டர் பீன்ஸ் நம் நாட்டில் இங்கிலீஷ் காய் என்று அழைக்கப்படுகிறது.

இதன் இனிப்பு கலந்த தனிப்பட்ட சுவையினால் சமையலில் பயன்படுத்தக்கூடிய சிறப்பான காய் என்ற அந்தஸ்தை இக்காய் பெறுகிறது.

இக்காய் பார்ப்பதற்கு வழுவழுப்பான வெண்ணெய் போன்று இருப்பதால் பட்டர் பீன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
பட்டர் பீன்ஸில் விட்டமின் பி1(தயாமின்), பி6(பைரிடாக்ஸின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி2(ரிபோஃப்ளேவின்), போலேட்டுகள் ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. விட்டமின் இ,கே, பி3(நியாசின்) போன்றவையும் உள்ளன.

தாதுஉப்புக்களான தாமிர சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை அதிகளவு காணப்படுகின்றன.

மேலும் இதில் செலீனியம், கால்சியம் ஆகியவையும் உள்ளன. இக்காயில் கார்போஹைட்ரேட், புரோடீன், நார்சத்து ஆகியவை அதிகளவு உள்ளன. குறைந்த எரிசக்தியையும் இக்காய் கொண்டுள்ளது.

பட்டர் பீன்ஸில் உள்ள நார்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. இக்காயில் உள்ள அதிகப்படியான மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது.

இக்காயில் உள்ள பொட்டாசியம் இரத்தநாளங்களை தளர்வுறச் செய்து இதயத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடை செய்யப்படுகிறது.

இதய நோயினை உண்டாக்கக்கூடிய ஹோமோசைஸ்டீன் அளவினை இக்காயில் உள்ள ஃபோலேட்டுகள் குறைக்கின்றன. இவ்வாறாக இதய நோய் ஏற்படாமல் இக்காயில் உள்ள ஊட்டசத்துகள் நம்மைப் பாதுகாக்கின்றன

பட்டர் பீன்ஸில் புரோடீன் அளவு அதிகமாக உள்ளது. இக்காயில் உள்ள புரோடீனானது எளிதில் ஆற்றலாக மாற்றும் வகையில் உள்ளது.

இக்காயினை உண்ணும்போது நமது பகுத்தறியும் திறன் மற்றும் கவனத்திற்கு தேவையான ஆற்றல் உடனடியாக கிடைக்கப் பெறுகிறது.

இக்காயில் உள்ள மெக்னீசியமானது உடலின் ஆற்றல் உற்பத்தி செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது.

இக்காயில் உள்ள இரும்புச் சத்து இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்கி ஆற்றலின் அளவினை அதிகரிக்கிறது. எனவே இக்காயினை உண்டு அதிக ஆற்றலைப் பெறலாம்.

பட்டர் பீன்ஜில் உள்ள மாங்கனீசு உடலில் முக்கிய பொருளின் இணைப்பிற்கான என்சைமாகச் செயல்படுகிறது. இக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்கிறது.

மேலும் இந்த ஆன்டிஆக்ஸிஜென்டுகள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து நாள்பட்ட நோய்களான புற்றுநோய், கண்அழற்சி நோய் உள்ளிட்டவைகளை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே பட்டர் பீன்ஸினை உண்டு நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories