December 6, 2025, 8:53 AM
23.8 C
Chennai

சமையல் எரிவாயுவை இரு மாதங்களுக்கு இருப்பு வைக்க அறிவுறுத்தல்! கலக்கத்தில் காஷ்மீர்!

kasmir

காஷ்மீரில் இரு மாதங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை இருப்பில் வைத்திருக்க அம்மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது காஷ்மீர் மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக மூடப்படும் சூழ்நிலை இருப்பதால், மக்களுக்கு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவக் கூடாது என்ற அடிப்படையில் போதிய கேஸ் சிலிண்டர்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநரின் ஆலோசகர் உணவுத் துறைக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி, மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை இயக்குனர், காஷ்மீரில் இரு மாதங்களுக்குத் தேவையான கேஸ் சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் அவசர உத்தரவு என்றும் கூறியுள்ளார்.

அதேபோன்று காஷ்மீர் கந்தர்பால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமர்நாத் யாத்திரையையொட்டி, மத்திய ஆயுத போலீஸ் படையினர் தங்குவதற்கு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை காலி செய்து ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

கடந்த ஆண்டும் இதேபோன்று ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சூழ்நிலையில்தான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் பாலகோட் தாக்குதல் நடைபெற்றது.

மேலும், குளிர்காலத்தில்தான் காஷ்மீரில் நிலச்சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும். தற்போது கோடைக்காலம். அதேபோன்று கொரோனா காரணமாக இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு குறைவான நபர்களே வருவார்கள். அவ்வாறு இருக்கையில் இவ்வளவு பாதுகாப்பு எதற்கு? என்ற சந்தேகங்களால் அரசின் இந்த உத்தரவு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையைத் தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சிலர் பரப்பும் தவறான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் உணவுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories