சமையல் எரிவாயுவை இரு மாதங்களுக்கு இருப்பு வைக்க அறிவுறுத்தல்! கலக்கத்தில் காஷ்மீர்!

kasmir

காஷ்மீரில் இரு மாதங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை இருப்பில் வைத்திருக்க அம்மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது காஷ்மீர் மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக மூடப்படும் சூழ்நிலை இருப்பதால், மக்களுக்கு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவக் கூடாது என்ற அடிப்படையில் போதிய கேஸ் சிலிண்டர்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநரின் ஆலோசகர் உணவுத் துறைக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி, மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை இயக்குனர், காஷ்மீரில் இரு மாதங்களுக்குத் தேவையான கேஸ் சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் அவசர உத்தரவு என்றும் கூறியுள்ளார்.

அதேபோன்று காஷ்மீர் கந்தர்பால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமர்நாத் யாத்திரையையொட்டி, மத்திய ஆயுத போலீஸ் படையினர் தங்குவதற்கு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை காலி செய்து ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

கடந்த ஆண்டும் இதேபோன்று ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சூழ்நிலையில்தான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் பாலகோட் தாக்குதல் நடைபெற்றது.

மேலும், குளிர்காலத்தில்தான் காஷ்மீரில் நிலச்சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும். தற்போது கோடைக்காலம். அதேபோன்று கொரோனா காரணமாக இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு குறைவான நபர்களே வருவார்கள். அவ்வாறு இருக்கையில் இவ்வளவு பாதுகாப்பு எதற்கு? என்ற சந்தேகங்களால் அரசின் இந்த உத்தரவு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையைத் தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சிலர் பரப்பும் தவறான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் உணவுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories