December 6, 2025, 2:31 AM
26 C
Chennai

கனவின் விளைவு: முக்கிய குறிப்பைக் காட்டும் முதலை!

dream-1
dream-1

அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் முதலையை கனவில் கண்டால் நீங்கள் செய்யக்கூடிய வேலைகள் கடினமாக இருந்தாலும் முடிவில் உங்களுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்.

படிக்கும் மாணவர்கள் கனவில் முதலையை கண்டால் நீங்கள் நன்றாக படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்பதை குறிக்கிறது.

தொழில் செய்ய தொடங்குபவர்கள் கனவில் முதலையை கண்டால் உங்களுடைய குடும்ப உறவினர்களால் உங்களுடைய முதலீடுகளில் நிதிச் சிக்கல்கள் ஏற்படும் என்பதை குறிக்கிறது. கடுமையான விடாமுயற்சியுடன் செயல்படத் தவறினால் அதிக பணம் இழப்பு ஏற்படும் கவனமாக இருக்க வேண்டும்.

தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பவர்கள் கனவில் முதலையை கண்டால் நீங்கள் செய்யக்கூடிய ஒரு சில தவறுகளால் உங்களுடைய மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அதனால் கவனமாக தேர்வு எழுதவேண்டும் என்பதை குறிக்கிறது.

வணிகம் செய்பவர்கள் கனவில் முதலையை கண்டால் உங்களுக்கு பணம் மற்றும் இலாபம் எல்லா இடத்திலிருந்தும் அதிக அளவில் வந்து சேரும் என்பதை குறிக்கிறது. நல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது என்பதை குறிக்கிறது.

நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் கனவில் முதலையை கண்டால் உங்களுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

காதலித்துக் கொண்டிருப்பவர்கள் கனவில் முதலையை கண்டால் உங்களுடைய காதல் வெற்றிகரமாக நிறைவேறும் என்பதை குறிக்கிறது. ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் உங்களுடைய உறவுகள் இனிமையாக மாறும் என்பதை குறிக்கிறது.

Crocodile1 - 2025

திருமணமாகாதவர்கள், திருமணத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவர்கள் கனவில் முதலையை கண்டால் நல்ல அருமையான இடத்திலிருந்து உங்களுக்கு வரன் அமைய போகிறது என்பதை குறிக்கிறது.

வேலை, தொழில் விஷயமாக அடிக்கடி பிரயாணம் செய்பவர்கள் கனவில் முதலையை கண்டால் உங்களுடைய பயணத்தின் பொழுது ஒரு சில கஷ்டங்கள் ஏற்படப் போகிறது என்பதை குறிக்கிறது. விவேகமாக செயல்பட வேண்டும்.

திருமணமானவர்கள் கனவில் ஒரு முதலை யாரையோ கடித்துக் கொண்டிருப்பதை போல கனவு கண்டால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு முதலை யாரையோ சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் போல கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தை பார்த்து தொடர்ந்து பயப்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.

கனவில் ஒரு முதலலை உங்களை தொடர்ந்து விரட்டி அதிலிருந்து தப்பித்து விடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு வரக்கூடிய கடுமையான ஆபத்திலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள் என்பதை குறிக்கிறது.

கனவில் ஒரு முதலை உங்கள் அருகில் வருவது போல கண்டால் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அதிகம் பணம் செலவு செய்வீர்கள் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு முதலை விலங்கு ஒன்றை வேட்டையாடுவது போல கனவு கண்டால் உங்களுடைய வேலை, தொழில்களில் போட்டியாளர்களிடமிருந்து உங்களுக்கு பல எதிர்ப்புகள் வரப்போகிறது என்பதை குறிக்கிறது.

கூண்டில் அடைக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒரு முதலையை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு முதலையின் முதுகில் மிதித்தால் நீங்கள் மிகப்பெரிய பிரச்சனைகளிள் இருக்கிறீர்கள், அதில் இருந்து வெளியேறுவது கடினம் என்பதை குறிக்கிறது. இப்படிப்பட்ட கனவு உங்களுக்கு வரும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் உட்பட யாரையும் நம்பக்கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories