அயல்நாட்டுத் தூதுவரை கனவில் கண்டால் புதிய நபர் ஒருவரின் நட்பு கிடைக்கும்.
அயல்நாட்டவர் கனவில் வந்தால் வணிகத் தொடர்பு உண்டாகும்.
ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவதுபோல் கனவு வந்தால் செல்வந்தரின் நட்பு கிடைக்கும்.
அந்தணனைக் கனவில் கண்டால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.
ராமர் அம்புகளைச் சுமந்து வருவதுபோல் கனவு கண்டால் சந்தோஷச் செய்திகள் வரப் போகிறது என்று பொருள்.
தேவர்களை கனவில் கண்டால் நன்மை உண்டாகும்.
அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
உங்களுக்கு அறிமுகம் இல்லாதவருடன் நீங்கள் உரையாடுவது போல் கனவு வந்தால் உயர்ந்த நிலை உங்களை வந்தடையப்போகிறது என்று அர்த்தம்… உதாரணமாக விரோதியாக இருந்தவர்கள் கூட வலிய வந்து உதவி செய்யவார்கள்
ஒருவரை அடிப்பது போல் கனவு வந்தால் உங்களுடைய செல்வாக்கை அல்லது திறமையை சரியாக பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள் என்பதை குறிக்கும்.
எல்லோரும் தூங்குவது போல் கனவு வந்தால் அடுத்தவர்களுக்கு அறிவுறைக்கூறும் அந்தஸ்து உங்களுக்கு உள்ளது இதனால் உயர்வான பலன்களை பெறுவீர்கள் என்று அர்த்தம்.