இந்த வெயில்ல… இத மட்டும் செஞ்சிடாதீங்க…! ஜாக்கிரதை!

chilled water - 2026

வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது.40 டிகிரி செல்சியஸ் அல்லது
105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் இயல்பாகவே நாம் சில்லென்று ஐஸ் வாட்டரை எடுத்து மடக் மடக் என்று குடிக்க ரொம்பவே ஆசைப்படுவோம். அது என்னவோ, வெயில் நேரத்துல ரொம்பவே இதமா இருக்குற மாதிரி தோன்றும்!  அதுவும் வெயில்ல அலைஞ்சி திரிஞ்சி அக்கடான்னு வீட்டுக்குள் வந்ததுமே  நம்ம கண்ணுல படுற பிரிட்ஜு… அப்பாடா… என்று எண்ணத் தோன்றும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.

ஆனால் இங்குதான் நமக்கு ஆபத்து இருக்கிறது. அப்படி வெயில்ல வந்ததும் ஜில்லுனு தண்ணிய எடுத்துக் குடிச்சா… நமது உடலின் சிறிய ரத்தக் குழாய்கள் வெடித்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒரு மருத்துவர் தனது நண்பருடன் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தைக் கழுவியிருக்கிறார். உடனே, அவருடைய பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார். வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும்.

ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள். அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள்.

வீட்டுக்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, வீட்டுக்குள் நிலவும் வெப்ப நிலைக்கு ஏற்ப நமது உடல் தன்னை தயார்செய்து கொள்ளவிட வேண்டும். அதன் பின்னர் தான் இயற்கையான குளிர் நீரிலோ, வெதுவெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பமுள்ள தண்ணீரையோ குடிக்கலாம்.

வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர், ஐஸ் கட்டிகள் போடப்பட்ட தண்ணீரைக் குடிக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள். வெய்யில் நேரத்தில் மிகக்குளிர்ச்சியான ஐஸ் வாட்டரை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும்!

water may02 - 2026

வெயில் காலத்தில் சூடாக இருந்த சூழலில் இருந்து உடனே ஐஸ் வாட்டர் – ஜில்லுனு தண்ணீரை எடுத்து குடித்தால், அது செரிமானத்தை பாதிக்குமாம்! ஜீரண மண்டலத்தில் கோளாறு ஏற்பட்டு, அஜீரணக் கோளாறுகளுக்கு இட்டுச் செல்லும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தொண்டை அழற்சி, தொண்டைக் கட்டுதல், உள்ளிட்ட உடனடி பாதிப்புகள் உண்டாகும்! இதைத் தொடர்ந்து, சுவாசக் கோளாறும் ஏற்படும் எனவே குளிர் நீரைத் தவிர்ப்பது நல்லது!

உணவு உண்ட பிறகு குளிர் நீரைக் குடிப்பது, அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சூடு தேவைப்படுகிறது. உடனடியாக குளிர் நீர் அந்தச் சூட்டை தணித்து, கொழுப்பை கரைக்காமல், மேலும் மேலும் சேரத் தூண்டிவிடுகிறது. இதனால் கெட்ட கொழுப்பு உடலில் சேருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதயத் துடிப்பின் விகிதத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கிறது குளிர் நீர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இதனால் இதயத்தின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்!

வெயிலில் மட்டுமல்ல, அதிக உடற்பயிற்சி செய்துவிட்டு, வியர்வை வழிய வந்து குளிர் நீர் குடிப்பது, மாடிப் படி ஏறி இறங்கி மூச்சு முட்ட குளிர் நீர் குடிப்பது இவை எல்லாமே பிரச்னை தருவதுதான். காரணம், உங்கள் உடலுக்குள் திடீரெனப் புகும் ஐஸ் வாட்டர் – உங்கள் உடலுக்கான ஒரு ஷாக் கொடுக்கும் சமாசாரம்தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories