December 5, 2025, 8:32 PM
26.7 C
Chennai

எஃப்.ஐ.ஆர்.,ஐ பதிவு செய்த 24 மணி நேரத்தில் இணையத்தில் ஏற்ற உத்தரவு

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள (எஃப்ஐஆர்), பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தில்லியில் குற்ற வழக்குகளில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எஃப்ஐஆரை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாநகர காவல் துறைக்கு, தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதைச் சுட்டிக் காட்டி, அதேபோல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கம், பொது நல வழக்கைத் தொடுத்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எஃப்ஐஆரைப் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வழக்குகள் உள்ளிட்ட உணர்வுபூர்வமான வழக்குகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், மலைப்பாங்கான பகுதிகளில் இணையதள இணைப்பு மிகவும் குறைந்த வேகத்தில் செயல்படும். எனவே அதுபோன்ற பகுதிகளில் பதிவு செய்யப்படும் வழக்குகளை  72 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று நீதிபதிகள் தங்கள்  உத்தரவில் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories