எஃப்.ஐ.ஆர்.,ஐ பதிவு செய்த 24 மணி நேரத்தில் இணையத்தில் ஏற்ற உத்தரவு

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள (எஃப்ஐஆர்), பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தில்லியில் குற்ற வழக்குகளில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எஃப்ஐஆரை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாநகர காவல் துறைக்கு, தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதைச் சுட்டிக் காட்டி, அதேபோல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கம், பொது நல வழக்கைத் தொடுத்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எஃப்ஐஆரைப் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வழக்குகள் உள்ளிட்ட உணர்வுபூர்வமான வழக்குகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், மலைப்பாங்கான பகுதிகளில் இணையதள இணைப்பு மிகவும் குறைந்த வேகத்தில் செயல்படும். எனவே அதுபோன்ற பகுதிகளில் பதிவு செய்யப்படும் வழக்குகளை  72 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று நீதிபதிகள் தங்கள்  உத்தரவில் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories