ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14 -ஆம் தேதி (புதன்கிழமை) சென்னை மாவட்டத்துக்கு அரசு உத்தரவுப்படி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக அக்டோபர் 8 -ஆம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை நாளான 14-ஆம் தேதியன்று அலுவல்களைக் கவனிக்கும் வகையில், இங்குள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் செயல்படும் என ஆட்சியர் (பொறுப்பு) அழகுமீனா தெரிவித்துள்ளார்



