வரலாற்றில் முதல்முறையாக… ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு!

14 June11 P Chidambaram - 2026

ஐஎன்எக்ஸ்., மீடியா வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்களை தில்லி  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அண்மைக் காலமாக ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுக்களை விசாரித்து, ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து தடை செய்து ஒவ்வொரு கட்டமாக ஒத்திவைத்து வந்தது. இந்நிலையில் இன்று சிதம்பரம் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டுள்ளது ஆச்சரியத்துடன் கூடிய விவாதப் பொருள் ஆகியுள்ளது.

சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்த போது 2007ம்  ஆண்டில் ஐ.ன்எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு  வெளிநாடுகளில் இருந்து ரூ.350 கோடி முதலீடு  பெறுவதற்கு அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம்  அனுமதி அளித்தது. இதில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாக குற்றம்  சாட்டப்பட்டது. இவ்வழக்கை சிபிஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.

இது போல், சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது ஏர்செல் – மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான 3,500 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு தொடர்பாகவும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவ்விரு வழக்குகளிலும் விசாரணையில் இருந்து சிதம்பரம்  நழுவுகிறார் என்றும் எனவே, அவரை காவலில் எடுத்து
விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், இரு
விசாரணை அமைப்புகளும் தெரிவித்தன.

இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்ப தாகவும் ஆனால் தன்னை கைது செய்யக்கூடும் என்றும் தெரிவித்து, முன்ஜாமின் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு வழக்குகளிலும் சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து, 2018 ஜூலை 25 ஆம் தேதி முதலில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இதற்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனுக்களை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் அடுத்த 3 நாட்கள் தன்னைக் கைது செய்ய தடை விதிக்கும் படி சிதம்பரம் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனை பரிசீலனை செய்வதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை அணுகக் கூடும் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories