பா.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்கு ஆறு அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் சென்று உள்ளனர்!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்த நிலையில், மாலை அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்று சம்மன் வழங்கினர்.
முன்னதாக, இன்று நடந்த விசாரணையில் உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும், அவரது வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க மறுத்துவிட்டது. நாளை புதன்கிழமை விசாரிக்கப் படும் என்று கூறியது.
இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இன்று மாலை தில்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அப்போது ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. எனவே, சிதம்பரம் ஆஜராவதற்கான சம்மன் அளித்த அதிகாரிகள், அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவின் போது, அவருக்கு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் உதவியதுடன், அவருடன் வெகுநேரம் ஆலோசனையும் நடத்தியுள்ளார். தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் தொடர்ந்து எழுந்துள்ள சூழலையும் குறித்து அவருடன் விவாதிக்க, மூத்த வழக்குரைஞர்கள் சல்மான் குர்ஷித், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோரும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு தொடர்பாக விவாதித்தனர். அதே நேரம் உச்ச நீதிமன்ற தலைமை நிதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு, அவசர வழக்காக விசாரிக்காமல், புதன்கிழமை நாளை இதனை விசாரிப்பதாக கூறியது.
ப.சிதம்பரம் Scam Kingpin என்று டில்லி உயர்நீதிமன்றம். விசாரணையில் ஒத்துழைக்க மறுத்தார். மழுப்பலாக பதிலளித்தார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை வெளிவரும்.@news7tamil @News18TamilNadu @ThanthiTV @polimernews @PTTVOnlineNews
— H Raja (@HRajaBJP) August 20, 2019