அதிவேக ரயில்களில் 50% கட்டண உயர்வு:  திரும்பப் பெற ராமதாஸ் வலியுறுத்தல்

 சென்னை:
அதிவேக ரயில்களில் 50% கட்டண உயர்வு என்பதுவிமானத்தை விட அதிகமாக இருப்பது என்று கூறி, இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்
அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ உள்ளிட்ட அதிவேகத் தொடர்வண்டிகளில் நாளை புதிய கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய  கட்டண முறைப்படி தொடர்வண்டிக் கட்டணம் 50% வரை உயரும். இதனால் தொடர்வண்டித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்தக் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது.
 ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ உள்ளிட்ட அதிவேகத் தொடர்வண்டிகளில் முதல் 10% படுக்கைகளுக்கு  வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பின் ஒவ்வொரு 10% படுக்கைகளுக்கும் 10 விழுக்காடு வீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது 20% படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், ஒருவர் முன்பதிவு செய்வாரானால் அவர் 20% கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். 50விழுக்காட்டிற்கு மேல் படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 50% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். , குளிரூட்டி வசதியுடன் கூடிய மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். முதல் வகுப்பு, எக்சிகியூட்டிவ் வகுப்புக்கு இந்த உயர்வு பொருந்தாது.
இந்த கட்டண உயர்வு  நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ஆகியவை  உயர்வகுப்பினருக்கான தொடர்வண்டிகள் என்று அழைக்கப்பட்ட காலம் மாறி விட்டது. இப்போது நடுத்தர வகுப்பினரும் இத்தகைய தொடர்வண்டிகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் உயர்வு அவர்களை இத்தகைய தொடர்வண்டிகளில் பயணம் செய்ய விடாமல் தடுக்கும். உயர்வகுப்பினர் பயணம் செய்யும் முதல் வகுப்பு மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு கட்டணங்களை உயர்த்தாமல், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குளிரூட்டி வசதியுடன் கூடிய மூன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு கட்டணங்களை மட்டும் உயர்த்துவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இப்புதிய கட்டண முறை நடைமுறைக்கு வந்தால் தொடர்வண்டிக் கட்டணங்கள் விமான கட்டணங்களை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக சென்னை& மதுரை இடையிலான துராந்தோ தொடர்வண்டியில் குளிரூட்டி வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ.1445 ஆகும். 50 விழுக்காடு இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்ட பின்னர், இந்த தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்புக் கட்டணமாக ரூ.2120 வசூலிக்கப்படும். அதேநேரத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு தனியார் விமானங்களில் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.1803 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதேபோல், சென்னை& திருவனந்தபுரம் இடையிலான சதாப்தி தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்புக் கட்டணமாக ரூ.3209 வரை வசூலிக்கப்படவுள்ள நிலையில்,  விமானங்களின் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.2724 மட்டும் தான். பயண நேரத்தை பெருமளவு குறைக்கும் விமானங்களை விட தொடர்வண்டிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது எந்த வகையான பொருளாதார உத்தி என்பதை மத்திய அரசும், பிரதமரும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும். தொடர்வண்டிகளில் பயணம் செய்யும் நடுத்தர வகுப்பு மக்கள் விமானங்களை நோக்கி திரும்புவதற்கே இது வகை செய்யும்.
அதிவேக தொடர்வண்டிகளில் இப்படி ஒரு கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவை என்ன? என்பது தான் தெரியவில்லை. விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது முதலில் சில வாரங்களுக்கு குறைந்த கட்டணமும், கடைசியாக முன்பதிவு செய்வோருக்கு அதிக கட்டணமும்  வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை தொடர்வண்டிகளுக்கு பொருந்தாது. பெரும்பாலான நேரங்களில் தொடர்வண்டி படுக்கைகள் ஒரு சில நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.  அத்தகைய சூழலில் காலை 10.00 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு கட்டணமும், காலை 10.05 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணமும் வசூலிப்பது நியாயமான செயலாக இருக்காது.
ஏற்கனவே சிறப்புத் தொடர்வண்டிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ தொடர்வண்டிகளின் கட்டணமும் உயர்த்தப்படுவது முறையல்ல. தொடர்வண்டிகளை தூய்மையாகவும், சரியான நேரத்திற்கும் இயக்க நடவடிக்கைகள் எடுக்காமல், கட்டணத்தை மட்டும் உயர்த்துவது தொடர்வண்டித்துறை மீது மக்களுக்கு வெறுப்பையும், கோபத்தையும் மட்டுமே ஏற்படுத்தும். எனவே, ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ தொடர்வண்டிகளில் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்.
ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories