December 6, 2025, 9:35 AM
26.8 C
Chennai

அதிவேக ரயில்களில் 50% கட்டண உயர்வு:  திரும்பப் பெற ராமதாஸ் வலியுறுத்தல்

 சென்னை:
அதிவேக ரயில்களில் 50% கட்டண உயர்வு என்பதுவிமானத்தை விட அதிகமாக இருப்பது என்று கூறி, இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்
அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ உள்ளிட்ட அதிவேகத் தொடர்வண்டிகளில் நாளை புதிய கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய  கட்டண முறைப்படி தொடர்வண்டிக் கட்டணம் 50% வரை உயரும். இதனால் தொடர்வண்டித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்தக் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது.
 ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ உள்ளிட்ட அதிவேகத் தொடர்வண்டிகளில் முதல் 10% படுக்கைகளுக்கு  வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பின் ஒவ்வொரு 10% படுக்கைகளுக்கும் 10 விழுக்காடு வீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது 20% படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், ஒருவர் முன்பதிவு செய்வாரானால் அவர் 20% கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். 50விழுக்காட்டிற்கு மேல் படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 50% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். , குளிரூட்டி வசதியுடன் கூடிய மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். முதல் வகுப்பு, எக்சிகியூட்டிவ் வகுப்புக்கு இந்த உயர்வு பொருந்தாது.
இந்த கட்டண உயர்வு  நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ஆகியவை  உயர்வகுப்பினருக்கான தொடர்வண்டிகள் என்று அழைக்கப்பட்ட காலம் மாறி விட்டது. இப்போது நடுத்தர வகுப்பினரும் இத்தகைய தொடர்வண்டிகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் உயர்வு அவர்களை இத்தகைய தொடர்வண்டிகளில் பயணம் செய்ய விடாமல் தடுக்கும். உயர்வகுப்பினர் பயணம் செய்யும் முதல் வகுப்பு மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு கட்டணங்களை உயர்த்தாமல், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குளிரூட்டி வசதியுடன் கூடிய மூன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு கட்டணங்களை மட்டும் உயர்த்துவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இப்புதிய கட்டண முறை நடைமுறைக்கு வந்தால் தொடர்வண்டிக் கட்டணங்கள் விமான கட்டணங்களை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக சென்னை& மதுரை இடையிலான துராந்தோ தொடர்வண்டியில் குளிரூட்டி வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ.1445 ஆகும். 50 விழுக்காடு இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்ட பின்னர், இந்த தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்புக் கட்டணமாக ரூ.2120 வசூலிக்கப்படும். அதேநேரத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு தனியார் விமானங்களில் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.1803 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதேபோல், சென்னை& திருவனந்தபுரம் இடையிலான சதாப்தி தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்புக் கட்டணமாக ரூ.3209 வரை வசூலிக்கப்படவுள்ள நிலையில்,  விமானங்களின் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.2724 மட்டும் தான். பயண நேரத்தை பெருமளவு குறைக்கும் விமானங்களை விட தொடர்வண்டிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது எந்த வகையான பொருளாதார உத்தி என்பதை மத்திய அரசும், பிரதமரும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும். தொடர்வண்டிகளில் பயணம் செய்யும் நடுத்தர வகுப்பு மக்கள் விமானங்களை நோக்கி திரும்புவதற்கே இது வகை செய்யும்.
அதிவேக தொடர்வண்டிகளில் இப்படி ஒரு கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவை என்ன? என்பது தான் தெரியவில்லை. விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது முதலில் சில வாரங்களுக்கு குறைந்த கட்டணமும், கடைசியாக முன்பதிவு செய்வோருக்கு அதிக கட்டணமும்  வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை தொடர்வண்டிகளுக்கு பொருந்தாது. பெரும்பாலான நேரங்களில் தொடர்வண்டி படுக்கைகள் ஒரு சில நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.  அத்தகைய சூழலில் காலை 10.00 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு கட்டணமும், காலை 10.05 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணமும் வசூலிப்பது நியாயமான செயலாக இருக்காது.
ஏற்கனவே சிறப்புத் தொடர்வண்டிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ தொடர்வண்டிகளின் கட்டணமும் உயர்த்தப்படுவது முறையல்ல. தொடர்வண்டிகளை தூய்மையாகவும், சரியான நேரத்திற்கும் இயக்க நடவடிக்கைகள் எடுக்காமல், கட்டணத்தை மட்டும் உயர்த்துவது தொடர்வண்டித்துறை மீது மக்களுக்கு வெறுப்பையும், கோபத்தையும் மட்டுமே ஏற்படுத்தும். எனவே, ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ தொடர்வண்டிகளில் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories