December 6, 2025, 6:53 AM
23.8 C
Chennai

‘ஆர்டர் ஆஃப் ஸயீத்’: அமீரகத்தின் உயரிய விருது பெற்ற மோடி!

modi award uae - 2025

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஸயீத் விருது வழங்கப்பட்டது. இதனை தனி நபருக்குக் கொடுக்கப் பட்டதை விட 130 கோடி இந்தியர்களின் கலாசார செழுமைக்கு கொடுக்கப் பட்ட விருதாகவும் கூறியுள்ளார் பிரதமர் மோடி. இதற்காக யுஏஇ அரசுக்கு தாம் நன்றி கூறுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு ஆதரவாகவும் இஸ்லாமிய நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அந்த நாடுகளை வற்புறுத்தி வரும் நேரத்தில், இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகம், பாரதப் பிரதமர் மோடிக்கு இந்த உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இரு நாட்டு நல்லுறவுக்கு பாரதப் பிரதமர் மோடி மேற்கொண்ட பணிகளை பாராட்டும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆர்டர் ஆஃப் ஸயீத் விருதை அறிவித்தது.

modi award - 2025

இந்நிலையில் பிரதமர் மோடி மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் ஒரு கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது யுஏஇ பட்டத்து இளவரசரான முகமது பின் ஸயத் அல் நஹ்யான், இந்த உயரிய விருதினை பாரதப் பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவைக் கண்டிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய நாடுகளை பாகிஸ்தான் வலியுறுத்தி வரும் நேரத்தில், இந்தியாவுடனான தாங்கள் நல்லிணக்கமாகவும், இரு தரப்பு உறவுகளை வலுப் படுத்தியதற்காகவும் இந்த விருதை அளிப்பதாக யு.ஏ.இ., கூறியுள்ளது.

தற்போது, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் என மூன்று நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் எடோவர்ட் பிலிப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரான்சில் வாழும் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்றார்.

பின்னர், ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து பஹ்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி. பஹ்ரைனுக்கு செல்லும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories