சிதம்பரத்துக்குக் கிடைக்குமா… ஜாமீன்?!

p chidambaram - 2026

ஐஎன்எக்ஸ்., மீடியா வழக்கில் கைதாகி சிபிஐ விசாரணையில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனு, திங்கள் கிழமை இன்று விசாரணைக்கு வருகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், அந்த நிறுவனம் அன்னிய முதலீட்டைப் பெறுவதில், மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் பதவியைப் பயன்படுத்தி, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் முறைகேடாக நிதிப் பரிமாற்றம் செய்யப் பட்டதாகவும், கார்த்தி சிதம்பரம் அதில் பெரும் பலன் அடைந்ததாகவும் சிபிஐ., மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வழக்குகளில் தாம் கைது செய்யப் படாமல் இருக்க, தில்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து, அதன் மூலம், கைது செய்யத் தடை விதிக்கும் வகையில் தொடர்ந்து நீட்டிப்பு பெற்று வந்தார் ப.சிதம்பரம். ஆனால் கடந்த வாரம் தில்லி நீதிமன்றம் திடீரென்று, ப.சிதம்பரத்தை கொள்ளைக்கூட்டத் தலைவர் என்று அதிரடியாக விமர்சித்ததுடன், அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்து, தள்ளுபடி செய்தது. இதனால் சிபிஐ.,யின் அதிரடி கைது நடவடிக்கையில் சிக்கினார் சிதம்பரம்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இந்நிலையில், திங்கள் கிழமை இன்று வரை சிதம்பரத்தை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றது சிபிஐ.,

இதனிடையே, சிபிஐ.,க்கு வழங்கப் பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதே நேரம், தங்களது கேள்விகள் எதற்கும் சிதம்பரம் பதில் சொல்லவில்லை என்று கூறிவந்தது சிபிஐ.,

மேலும், இந்த வழக்கில் அடுத்த அமைப்பான அமலாக்கத்துறையும், ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள சட்ட நடவடிக்கைகளுடன் தயாராக காத்திருக்கிறது.

இதனிடையே, சிபிஐ., காவல் கால அவகாசம் முடிவதை அடுத்து, நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப் படுகிறார் ப.சிதம்பரம். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் அதே நேரத்தில், சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு குறித்து சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப் படும் என்று கூறப் படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories