சிதம்பரத்துக்குக் கிடைக்குமா… ஜாமீன்?!

p chidambaram - 2026

ஐஎன்எக்ஸ்., மீடியா வழக்கில் கைதாகி சிபிஐ விசாரணையில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனு, திங்கள் கிழமை இன்று விசாரணைக்கு வருகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், அந்த நிறுவனம் அன்னிய முதலீட்டைப் பெறுவதில், மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் பதவியைப் பயன்படுத்தி, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் முறைகேடாக நிதிப் பரிமாற்றம் செய்யப் பட்டதாகவும், கார்த்தி சிதம்பரம் அதில் பெரும் பலன் அடைந்ததாகவும் சிபிஐ., மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வழக்குகளில் தாம் கைது செய்யப் படாமல் இருக்க, தில்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து, அதன் மூலம், கைது செய்யத் தடை விதிக்கும் வகையில் தொடர்ந்து நீட்டிப்பு பெற்று வந்தார் ப.சிதம்பரம். ஆனால் கடந்த வாரம் தில்லி நீதிமன்றம் திடீரென்று, ப.சிதம்பரத்தை கொள்ளைக்கூட்டத் தலைவர் என்று அதிரடியாக விமர்சித்ததுடன், அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்து, தள்ளுபடி செய்தது. இதனால் சிபிஐ.,யின் அதிரடி கைது நடவடிக்கையில் சிக்கினார் சிதம்பரம்.

இந்நிலையில், திங்கள் கிழமை இன்று வரை சிதம்பரத்தை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றது சிபிஐ.,

இதனிடையே, சிபிஐ.,க்கு வழங்கப் பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதே நேரம், தங்களது கேள்விகள் எதற்கும் சிதம்பரம் பதில் சொல்லவில்லை என்று கூறிவந்தது சிபிஐ.,

மேலும், இந்த வழக்கில் அடுத்த அமைப்பான அமலாக்கத்துறையும், ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள சட்ட நடவடிக்கைகளுடன் தயாராக காத்திருக்கிறது.

இதனிடையே, சிபிஐ., காவல் கால அவகாசம் முடிவதை அடுத்து, நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப் படுகிறார் ப.சிதம்பரம். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் அதே நேரத்தில், சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு குறித்து சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப் படும் என்று கூறப் படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories