இந்தாண்டில் 2-வது முறையாக டிரம்ப்புடன் மோடி இன்று பேச்சு!

ஜி 7 மாநாட்டின் இடையே இன்று பிற்பகல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஜி 7 நாடுகள் மாநாடு நடைபெறும் பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் இன்று பிற்பகல் 3.45 முதல் 4.30 மணி வரை டிரம்ப்பும் மோடியும் நேருக்கு நேராக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த ஆண்டில் இந்த இரு தலைவர்களும் சந்திப்பது இரண்டாவது முறையாகும்.

முதல் சந்திப்பு ஜி 20 மாநாடுகளிடையே ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் நடைபெற்றது. தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தால் நிலவும் பனிப்போர் குறித்து டிரம்ப் மோடியுடன் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய இந்திய அரசு எடுத்த முடிவு அதன் உள்நாட்டு விவகாரம் என்றும் இந்தப் பிரச்சினையில் இந்தியா பாகிஸ்தானைத் தவிர மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு இடமே இல்லை என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

ஆயினும் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று டிரம்ப் அண்மையில் மூன்றாவது முறையாக குறிப்பிட்டுள்ளார். இன்றைய சந்திப்பிலும் அதனை டிரம்ப் முன்வைப்பார்.ஆனால் டிரம்ப்புக்கு உரிய விதத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி தெளிவுபடுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் அமைதியை நிலைநிறுத்துவதற்கு மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகள் குறித்தும் மோடி டிரம்ப் பேச்சுகளில் எதிரொலிக்கக் கூடும்.இது தவிர வர்த்தக உறவுகளில் சுங்க வரிவிதிப்பு உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் நீடிப்பதால் அதற்கு தீர்வு காண இருதலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். டிரம்ப் தவிர மேலும் நான்கு நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி இருநாட்டு பரஸ்பர உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடி- டிரம்ப் பேச்சுவார்த்தையின் போது ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது, ஜி 7 நாடுகளில் ரஷ்யாவை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.சுற்றுச்சூழல், டிஜிட்டல் பொருளாதாரம், சீனா வர்த்தகம் போன்றவற்றுடன் இவை விவாதிக்கப்பட உள்ளன. இந்நிலையில் நேற்று திடீரென எதிர்பாராத விருந்தினராக ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜாரீப் பிரான்சுக்கு வந்து ஜி 7 மாநாட்டில் கலந்துக் கொண்டார்.

ஈரான் அணு ஆயுத சோதனை நடத்துவதைத் தடுப்பதற்கும் அமெரிக்கா ஈரான் இடையிலான மோதலை தணிப்பதற்கும் இச்சூழல் உதவும் என்று ஜி 7 நாட்டு தலைவர்கள் நம்புகின்றனர்.ஈரானுடன் எண்ணெய் பொருட்கள் வாங்குவதற்கான புதிய ஒப்பந்தம் செய்வதை இந்தியா வரவேற்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories