துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற தமிழச்சி இளவேனில்! குவியும் பாராட்டுகள்!

Published:

ilavenil valarivan - 2026

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாளறிவன் தங்கம் வென்றுள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் – ஏர் ரைஃபில் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாளறிவன், 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த இளவேனில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார்.

ilavenil - 2026

ரியோ டி ஜெனிரோவில் புதன்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்ற மூத்த ஐ.எஸ்.எஸ்.எஃப் வீராங்கனையான இளவேனில் வாளறிவன், அபூர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆனார்!

20 வயதான இளவேனில், 251.7 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த சியோனாய்ட் மெக்கின்டோஷ் 250.6 புள்ளிகளுடன் வெள்ளி வென்றனர்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா ஏற்கனவே அதிகபட்சம் 2 ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றுள்ளது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img