அமெரிக்காவிலும் போய்… மாட்டுக்கு தீவனம் கொடுத்த ‘விவசாயி’ எடப்பாடி பழனிசாமி!

edappadi london1 - 2026
பட விளக்கம்: அமெரிக்காவே ஆனாலும் தனக்குள் உள்ள ஒரு விவசாயியை, பசுவுக்கு காட்டக் கூடிய பாசத்தை விடாத பாமர மக்களின் பிரதிநிதியாக, பஃபல்லோ நகரில் எடப்பாடி பழனிசாமி.

அமெரிக்காவின் பஃபல்லோ நகருக்கு அருகே கால்நடைப் பண்ணையைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள தொழில்நுட்பங்களை நேரில் கேட்டறிந்ததுடன், மாட்டுக்கு அன்புடன் தீவனமும் கொடுத்து மகிழ்ந்தார்.

அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நியூயார்க்கில் இருந்து பஃபல்லோ நகருக்குச் சென்றார்.

விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் வரவேற்றனர். பின்னர், ஓக்ஃபீல்ட் என்ற இடத்தில் உள்ள கால்நடைப் பண்ணையை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, பல்வேறு நாட்டு இன மாடுகளின் மரபணு பராமரிப்பு மற்றும் மரபணுவைக் கொண்டு அதிகமாக பால் தரக்கூடிய மாட்டு இனங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தார்.

நோய் எதிர்ப்பு சக்தி உடைய புதிய ரக மாடுகள், ஆடுகளை உருவாக்குதல், பால், இதரப் பொருட்களைப் பதப்படுத்துதல், கால்நடைகள் பராமரிப்பு, தீவனம், பண்ணைப் பதிவேடு முறைகள், சிகிச்சை என பலவற்றை அவருக்கு விளக்கினர்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள கால்நடைப் பூங்காவில் இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது குறித்து அவர் கேட்டறிந்தார்.

முதல்வருடன், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories