வழக்கமான முறையில் சிறப்பாக நடந்தது ‘செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்’!

senkottai vinayakar chaturthi procession3 - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குண்டாறு பாலத்தின் அடியில் கரைக்கப்பட்டன!

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பாரம்பரியமான ஊர்வலப் பாதையில் தொடங்கி, மிக அமைதியான முறையில் நடைபெற்றது. வழக்கமாக மூன்று மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு மேல் நீளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்த முறை பலத்த பாதுகாப்புடன் முன்னதாகவே தொடங்கியது.

மதியம் 12 மணியளவில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒரே இடத்தில் கொண்டுவரப்பட்டு ஊர்வலம் தொடங்கி செங்கோட்டை நகர் வீதிகளில் வலம் வந்தது. மாலை 5 மணிக்கு முன்னதாகவே அனைத்து சிலைகளும் தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் கரைக்கப்பட்டன!

செங்கோட்டை நகரில் இந்த முறை எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்!

senkottai vinayakar chaturthi procession1 - 2026

தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் மேற்பார்வையில் ஊர்வலம் நடைபெற்றது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் வட்ட ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்பட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனிருந்து கவனித்து வந்தனர்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

முன்னதாக, குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டு வெளியில் வந்தவர்கள், பிரச்னைக்கு உரியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். தொடர்ந்து நகர் முழுதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்!

விநாயகர் சிலைகள் குண்டாற்றில் கரைக்கப்பட்ட பின்னர் ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன்.

senkottai vinayakar chaturthi procession2 - 2026

அப்போது அவர், செங்கோட்டை நகரில் ஊர்வலம் அமைதியாக நடைபெற காவல்துறை, வருவாய்த்துறை, இதர அரசுத்துறைகள் அனைத்தும் ஒன்றிணைந்து கடந்த 10 நாட்கள் அனைத்து தரப்பு சமுதாய மக்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை வகுத்து, அதனைக் கடைப்பிடித்து இன்று தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விழா சிறு அசம்பாவிதமும் இன்றி மிகவும் அமைதியாக நிறைவடைந்துள்ளது!

இதற்காக செங்கோட்டை நகர் வாழ் அனைத்து தரப்பு சமுதாய மக்கள், விழாவை நடத்தியவர்கள், விழாவில் கலந்து கொண்டவர்கள் என அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

தொடர்ந்து இனிவரும் காலங்களிலும் இது போல் அமைதியாக மிகவும் சிறப்பாக இதைவிட இன்னும் சிறப்பாக ஊர்வலம் நடைபெற இந்தப் பகுதியினர் செயல்பட வேண்டும். அதற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு தரும்!

senkottai vinayakar chaturthi procession4 - 2026

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிறப்பாக பணியாற்றிய எங்கள் காவல் அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் இந்த தருணத்தில் என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடையநல்லூரிலும், செங்கோட்டையில் நடைபெற்றது போன்று, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது!இதேபோன்று நாளை அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படும்…. என்று கூறினார் தென்மண்டல ஐஜி., சண்முக ராஜேஸ்வரன்.

senkottai vinayakar chaturthi south zone ig shanmugarajeswaran - 2026
தென்மண்டல ஐஜி., சண்முகராஜேஸ்வரன்

செங்கோட்டை நகரில் கடந்த வருடம் போல் பிரச்னை ஏதும் ஏற்படாமல், அமைதியாக நடைபெற்றது குறித்து தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊர்வலம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த செங்கோட்டை நகர அனைத்து தரப்பு மக்களுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கோட்டை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியும் பாராட்டுதலையும் தெரிவிக்கிறேன். நெல்லை மாவட்டத்தில் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் எந்த வித பிரச்னையையும் சரி செய்யலாம் என்பதற்கு முன்னுதாரணமாக செங்கோட்டை மக்கள் இருந்தனர்… என்று பாராட்டினார்!

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories