திஹாருக்கு அனுப்பாதீங்க: கெஞ்சும் சிதம்பரம்! நீதிமன்றக் காவல் கொடுங்க: மிஞ்சும் சிபிஐ!

chidamabaram court - 2026

விதியின் விளையாட்டு என்றே குறிப்பிடும் படியாக, ப.சிதம்பரத்தின் வழக்கு சென்று கொண்டிருக்கிறது. சிபிஐ.,க்கு அன்று ஓடி ஒளிந்த ப.சிதம்பரம், இன்று அமலாக்கத்துறை கேட்காமலேயே, இன்னும் கைது செய்யப் படாமலேயே தாம் அமலாக்கத்துறையில் சரணடையத் தயார் என்றும், தன்னை திஹாருக்கு அனுப்பி விடாதீர்கள் என்றும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

தயவுசெய்து … நான் அமலாக்கத்துறையிடம் சரணடைகிறேன்; என்னை திஹார் சிறைக்கு மட்டும் அனுப்பாதீர்கள் என்று சிதம்பரம் நீதிமன்றத்தில் கெஞ்சுகிறார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை தொடர்கிறது என்றும், சாட்சிகளை கலைக்கவில்லை என்பதால், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பக் கூடாது என்றும் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினால் அது அவரை தொல்லைக்கு உட்படுத்துவதாக அமையும் என்றும் கபில்சிபல் நீதிமன்றத்தில் கூறினார்.

chidambaram behind bars - 2026

மேலும், ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சரணடைய தயாராக உள்ளார் என்று சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். வேண்டுமென்றால், சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து கொள்ளட்டும் என்றும் அவர் நீதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும், சிபிஐ விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்ற காவலுக்கான காரணங்களை சிபிஐ முன் வைக்க வேண்டும் என்று கூறினார் கபில் சிபல்!

முன்னதாக, ஐ.என்.எக்ஸ் நிதி பரிவர்த்தனை முறைகேட்டு வழக்கில், ப.சிதம்பரத்தை 15 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்புங்கள்;வழக்கு குறித்த தகவல்கள் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளது என்று சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

நீதிமன்றக் காவலில் ப.சிதம்பரத்தை வைக்க உத்தரவிடப்பட்டால், ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த வாதங்களின் முடிவை நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.

ப.சிதம்பரம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப் படுவதற்கு முன்பும் பின்பும் திஹாரில் வைக்கப் பட வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தி யுள்ளார் சுப்பிரமணிய சுவாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories