பிஷப்புக்கு எதிராக பாலியல் புகார்… கன்யாஸ்திரிக்கு ஆதரவு தந்தவர் இப்போது தனிமைச் சிறையில்!

nun lucy bishop mulakkal - 2026

பிஷப் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் புகார் தெரிவித்த கன்யாஸ்திரிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால், கன்னியாஸ்திரி லூஸி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்!

கேரளத்தில் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிரான பாலியல் புகார் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிக்கு ஆதரவு தெரிவித்த கன்னியாஸ்திரி லூசி அவர் தங்கியுள்ள மடத்தின் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கர்த்தரே நான் இங்கு தனிமையில் என்ற அவரது வாசகம் கேரளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்த பிராங்கோ தன்னை இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் செய்வதாக கூறி கன்னியாஸ்திரிகள் சிலர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிராங்கோ கைது செய்யப்பட்டார்~

nun lucy - 2026

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாஸ்திரி லூசி என்பவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் இந்த நிகழ்வுக்குப் பின்னர், அவர் தங்கியுள்ள சர்ச் விடுதியில் பிரச்னைகள் பலவற்றை அவர் சந்தித்து வருகிறார்! இதுகுறித்து அவர் கூறியபோது, என் 18 வயதில் கன்னியாஸ்திரியாக வாழ்க்கையை அர்ப்பணித்தேன். 34 ஆண்டுகள் கடந்துவிட்டன. வாழ்க்கையின் பெரும்பகுதியை பொதுச் சேவைக்காக அர்ப்பணித்து விட்டேன்.

என் உடல் நிலையை காரணம் காட்டி சுடிதார் அணிய கோரிக்கை வைத்தபோது அதை நிராகரித்தனர். கேரளத்தில் மட்டும் தான் வஸ்திரம் கட்டாயப் படுத்தப் படுகிறது. பிஷப் பிராங்கோ போன்றவர்கள் அந்த வஸ்திரத்துக்கு என்ன மரியாதை கொடுக்கின்றனர்?

Bishop Franco Mulakkal - 2026

அவரால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டத்தில் பேசினேன். ஆனால், அதன்பிறகு சக கன்னியாஸ்திரிகள் என்னை புறக்கணித்தனர். அவ்வளவு ஏன் எனது நெருங்கிய தோழிகள் கூட என்னுடன் பேசுவதில்லை.

என் அறையை சுற்றி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிவி பழுது உள்ளது சமையலறையில் என் உதவியாளர் திரும்பப் பெறப்பட்டு உள்ளார். ஒருவேளை உணவை மட்டும் வேறு வழியில்லாமல் நான் சாப்பிடுகிறேன்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி என்னை மடத்திலிருந்து நீக்கியதாக எனக்கு கடிதம் அனுப்பப்பட்டது; என்னை வெளியேற்ற முயற்சி நடக்கிறது! கர்த்தரே நான் இங்கு தனிமைப்படுத்த படுகிறேன்!

என் மரணத்துக்கு பின் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்து விட்டேன் எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் … என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories