பிஷப்புக்கு எதிராக பாலியல் புகார்… கன்யாஸ்திரிக்கு ஆதரவு தந்தவர் இப்போது தனிமைச் சிறையில்!

nun lucy bishop mulakkal - 2026

பிஷப் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் புகார் தெரிவித்த கன்யாஸ்திரிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால், கன்னியாஸ்திரி லூஸி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்!

கேரளத்தில் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிரான பாலியல் புகார் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிக்கு ஆதரவு தெரிவித்த கன்னியாஸ்திரி லூசி அவர் தங்கியுள்ள மடத்தின் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கர்த்தரே நான் இங்கு தனிமையில் என்ற அவரது வாசகம் கேரளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்த பிராங்கோ தன்னை இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் செய்வதாக கூறி கன்னியாஸ்திரிகள் சிலர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிராங்கோ கைது செய்யப்பட்டார்~

nun lucy - 2026

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாஸ்திரி லூசி என்பவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் இந்த நிகழ்வுக்குப் பின்னர், அவர் தங்கியுள்ள சர்ச் விடுதியில் பிரச்னைகள் பலவற்றை அவர் சந்தித்து வருகிறார்! இதுகுறித்து அவர் கூறியபோது, என் 18 வயதில் கன்னியாஸ்திரியாக வாழ்க்கையை அர்ப்பணித்தேன். 34 ஆண்டுகள் கடந்துவிட்டன. வாழ்க்கையின் பெரும்பகுதியை பொதுச் சேவைக்காக அர்ப்பணித்து விட்டேன்.

என் உடல் நிலையை காரணம் காட்டி சுடிதார் அணிய கோரிக்கை வைத்தபோது அதை நிராகரித்தனர். கேரளத்தில் மட்டும் தான் வஸ்திரம் கட்டாயப் படுத்தப் படுகிறது. பிஷப் பிராங்கோ போன்றவர்கள் அந்த வஸ்திரத்துக்கு என்ன மரியாதை கொடுக்கின்றனர்?

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!
Bishop Franco Mulakkal - 2026

அவரால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டத்தில் பேசினேன். ஆனால், அதன்பிறகு சக கன்னியாஸ்திரிகள் என்னை புறக்கணித்தனர். அவ்வளவு ஏன் எனது நெருங்கிய தோழிகள் கூட என்னுடன் பேசுவதில்லை.

என் அறையை சுற்றி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிவி பழுது உள்ளது சமையலறையில் என் உதவியாளர் திரும்பப் பெறப்பட்டு உள்ளார். ஒருவேளை உணவை மட்டும் வேறு வழியில்லாமல் நான் சாப்பிடுகிறேன்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி என்னை மடத்திலிருந்து நீக்கியதாக எனக்கு கடிதம் அனுப்பப்பட்டது; என்னை வெளியேற்ற முயற்சி நடக்கிறது! கர்த்தரே நான் இங்கு தனிமைப்படுத்த படுகிறேன்!

என் மரணத்துக்கு பின் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்து விட்டேன் எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் … என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories