December 5, 2025, 11:22 PM
26.6 C
Chennai

இறந்தவரின் உடலுக்கு சர்ச்சையிடும் சர்ச்!

chrch 1 - 2025

இறந்தவரின் உடலை அடக்கம் செய்த பின்னும் உடலை சொந்தம் கொண்டாடி கேரளாவில் இரு தேவாலய நிர்வாகங்களுக்கு இடையே நடக்கும் மோதலால் சர்ச்சை.

திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்தவரின் உடலுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது தொடர்பாக, இரண்டு தேவாலய நிர்வாகங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் பெய்லி (74 வயது). இவர், சில நாள் முன்பாக, கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் ஜாக்கோபைட் கிறிஸ்தவர்கள் மரபைச் சேர்ந்தவர் ஆவார். அதேசமயம், இவரது குடும்பம் மலங்காரா சர்ச் நிர்வாக ஊழியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஆவர்.

chruch - 2025

இந்நிலையில், ஜோசப்பை ஜேக்கோபைட் முறைப்படி அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட மலங்காரா சர்ச்சை சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர்.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ஜோசப் குடும்பத்தினர், இறுதியாக, போலீஸ் உதவியுடன் குடும்பத்தினர் விருப்பப்படி ஜோசப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஆம், இந்த விவகாரத்தை மலங்காரா சர்ச் நிர்வாகம் மிக எளிதில் விடுவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி, இதுபற்றி எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

ஆர்த்தோடாக்ஸ் மரபை பின்பற்றும் தங்களது நிர்வாகத்திற்கு உள்பட்ட செயின்ட் ஜான்ஸ் சர்ச் கல்லறையில் ஜேக்கோபைட் சிரியன் மரபை சேர்ந்தவரின் உடலை புதைத்துள்ளது ஏற்கக்கூடியதல்ல, அவரது உடலை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், ஜோசப் குடும்பத்தார் மட்டுமின்றி கேரள மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்து போன ஒருவரை நிம்மதியாக அடக்கம் செய்த பிறகும், விடாமல் துரத்துவது நியாயமற்ற செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அதேசமயம், மலங்காரா சர்ச் ஊழியத்திற்கு உள்பட்டவர்களின் இறப்பு உள்ளிட்ட விசயங்களில் ஆர்த்தோடாக்ஸ் மரபுப்படியான சடங்குகளை செய்வதற்கு உச்சநீதிமன்றம் 2017ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories