இறந்தவரின் உடலுக்கு சர்ச்சையிடும் சர்ச்!

chrch 1 - 2026

இறந்தவரின் உடலை அடக்கம் செய்த பின்னும் உடலை சொந்தம் கொண்டாடி கேரளாவில் இரு தேவாலய நிர்வாகங்களுக்கு இடையே நடக்கும் மோதலால் சர்ச்சை.

திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்தவரின் உடலுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது தொடர்பாக, இரண்டு தேவாலய நிர்வாகங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் பெய்லி (74 வயது). இவர், சில நாள் முன்பாக, கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் ஜாக்கோபைட் கிறிஸ்தவர்கள் மரபைச் சேர்ந்தவர் ஆவார். அதேசமயம், இவரது குடும்பம் மலங்காரா சர்ச் நிர்வாக ஊழியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஆவர்.

chruch - 2026

இந்நிலையில், ஜோசப்பை ஜேக்கோபைட் முறைப்படி அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட மலங்காரா சர்ச்சை சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர்.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ஜோசப் குடும்பத்தினர், இறுதியாக, போலீஸ் உதவியுடன் குடும்பத்தினர் விருப்பப்படி ஜோசப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஆம், இந்த விவகாரத்தை மலங்காரா சர்ச் நிர்வாகம் மிக எளிதில் விடுவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி, இதுபற்றி எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

ஆர்த்தோடாக்ஸ் மரபை பின்பற்றும் தங்களது நிர்வாகத்திற்கு உள்பட்ட செயின்ட் ஜான்ஸ் சர்ச் கல்லறையில் ஜேக்கோபைட் சிரியன் மரபை சேர்ந்தவரின் உடலை புதைத்துள்ளது ஏற்கக்கூடியதல்ல, அவரது உடலை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், ஜோசப் குடும்பத்தார் மட்டுமின்றி கேரள மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்து போன ஒருவரை நிம்மதியாக அடக்கம் செய்த பிறகும், விடாமல் துரத்துவது நியாயமற்ற செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அதேசமயம், மலங்காரா சர்ச் ஊழியத்திற்கு உள்பட்டவர்களின் இறப்பு உள்ளிட்ட விசயங்களில் ஆர்த்தோடாக்ஸ் மரபுப்படியான சடங்குகளை செய்வதற்கு உச்சநீதிமன்றம் 2017ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories