February 22, 2026, 12:35 AM
26.7 C
Chennai

இறந்தவரின் உடலுக்கு சர்ச்சையிடும் சர்ச்!

chrch 1 - 2026

இறந்தவரின் உடலை அடக்கம் செய்த பின்னும் உடலை சொந்தம் கொண்டாடி கேரளாவில் இரு தேவாலய நிர்வாகங்களுக்கு இடையே நடக்கும் மோதலால் சர்ச்சை.

திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்தவரின் உடலுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது தொடர்பாக, இரண்டு தேவாலய நிர்வாகங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் பெய்லி (74 வயது). இவர், சில நாள் முன்பாக, கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் ஜாக்கோபைட் கிறிஸ்தவர்கள் மரபைச் சேர்ந்தவர் ஆவார். அதேசமயம், இவரது குடும்பம் மலங்காரா சர்ச் நிர்வாக ஊழியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஆவர்.

chruch - 2026

இந்நிலையில், ஜோசப்பை ஜேக்கோபைட் முறைப்படி அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட மலங்காரா சர்ச்சை சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர்.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ஜோசப் குடும்பத்தினர், இறுதியாக, போலீஸ் உதவியுடன் குடும்பத்தினர் விருப்பப்படி ஜோசப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஆம், இந்த விவகாரத்தை மலங்காரா சர்ச் நிர்வாகம் மிக எளிதில் விடுவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி, இதுபற்றி எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

ஆர்த்தோடாக்ஸ் மரபை பின்பற்றும் தங்களது நிர்வாகத்திற்கு உள்பட்ட செயின்ட் ஜான்ஸ் சர்ச் கல்லறையில் ஜேக்கோபைட் சிரியன் மரபை சேர்ந்தவரின் உடலை புதைத்துள்ளது ஏற்கக்கூடியதல்ல, அவரது உடலை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், ஜோசப் குடும்பத்தார் மட்டுமின்றி கேரள மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்து போன ஒருவரை நிம்மதியாக அடக்கம் செய்த பிறகும், விடாமல் துரத்துவது நியாயமற்ற செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அதேசமயம், மலங்காரா சர்ச் ஊழியத்திற்கு உள்பட்டவர்களின் இறப்பு உள்ளிட்ட விசயங்களில் ஆர்த்தோடாக்ஸ் மரபுப்படியான சடங்குகளை செய்வதற்கு உச்சநீதிமன்றம் 2017ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories