பிரதமரும் அமித்ஷாவும் பொருளாதாரம் தெரியாதவர்கள்! கேஎஸ் அழகிரி!

ks azhakiri 2 - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று நாகர்கோவில் வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ள்`சமீப காலமாக இலங்கையில் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது. இலங்கையில் கூட்டாட்சி முறை இல்லாதக் காரணத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள்.

ks azhakiri - 2026

ராஜீவ்காந்தி கொண்டு வந்தது போல இலங்கையில் 13வது அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதன்மூலம் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் தான் தமிழர்களுக்கு என்று நிலையான வாழ்வு கிடைக்கும். இதற்கு மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தி.மு.க. முயற்சி செய்ய வேண்டும்.

அரசியலில் வழக்குகளும், சிறை வாசமும் வரும் காரணத்தால் பணிந்துவிடுபவர்கள் அல்ல நாங்கள். எல்லாவற்றையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ப.சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்திருப்பதில் அரசியல் சார்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பெருமையை சிதைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம், சசிதரூர், சிவகுமார் ஆகியோர் மீது வழக்கு போடப்படுகிறது.

ks azhakiri 1 1 - 2026

பொருளாதாரத்தில் ஓர் அழிவு சுனாமி ஏற்பட்டுள்ளது. இதற்கு பி.ஜே.பி-யின் அனுபவம் இன்மைதான் காரணம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்பட்டதால் மூன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவிகிதமாக குறைந்துள்ளது. பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாவிட்டாலும் அதுபற்றி தெரிந்தவர்களை உடன் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் துரதிர்ஷ்டமாக அமித் ஷாவை உடன் வைத்துள்ளார்.

k s azhakiri 1 - 2026

வெளிநாடு சென்றுள்ள முதல்வரின் முயற்சியை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. இதற்கு முன்பு இரண்டு முறை முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அது தொடர்பான வெள்ளை அறிக்கை தேவை.

நிதி ஆயோக், வரும் காலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி வழங்கப்படும் என்றும், நாடாளுமன்றத் தொகுதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. இது தமிழக மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழகத்தில் முன்பை விட மக்கள்தொகை குறைந்துள்ளது.

இதனால் குறைந்த நிதி கிடைப்பதுடன் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழகத்திற்கு கிடைப்பார்கள். நிதி ஆயோக் இந்த நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என நாங்கள் பிரசாரம் செய்யும் நிலை ஏற்படும்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

ரஜினி அரசியலுக்கு வருவாரா, வந்தால் பி.ஜே.பி-யில் இணைவாரா என்பது குறித்து இப்போது கூற முடியாது. இதையும் மீறி மக்கள் மன்றத்தில் நுழைய முடியும் என்ற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

ஸ்டாலின் மீது ஒரு வழக்கும் இல்லை. அப்படி உள்ளபோதும் அவர் கைது பயத்தில் உள்ளார் என அமைச்சர் கூறுவது தவறு. பேரிடர் காலங்களில் எளிதில் வந்து செல்லும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்” என்றார்

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

Topics

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories