February 19, 2026, 6:55 PM
28.4 C
Chennai

சாகும் முன் பிரதமருக்கு எழுதிய கடிதம்! பொருளாதார மந்தம் பசி’யால் வந்தது!

24 June27 PM Modi - 2026

அலகாபாத்: நாட்டின் தற்போதைய பொருளாதார சரிவிற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமே காரணம் என ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர், பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர் பைஜன் தாஸ்(55). இவர் உத்திரபிரதேச மாநிலத்தின் அலகாபாத்தை சேர்ந்தவர். இவர் செப்.,6 ம் தேதி விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். செப்.,8ம் தேதி நாள் முழுவதும் அறையை விட்டு பைஜன் வெளியே வராததால், விடுதி ஊழியர் அளித்த தகவலின் பேரில் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

p chidambaram - 2026

அப்போது பைஜன், ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு 5 பக்க தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அத்துடன் தனது இறுதி சடங்குகளுக்காகவும், அறை வாடகைக்காகவும் ரூ.2000 வைத்துள்ளார். தனது நிதி நிலைமை மோசமாக உள்ளதால் தன்னால் அதற்கு மேல் பணம் தர இயலவில்லை எனவும் பைஜன் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பைஜன் , பிரதமருக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில், “நாட்டின் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம். மோடி அரசு தான் பொருளாதார சரிவுக்கு காரணம் என யாராலும் கூற முடியாது.

letter to modi - 2026

முந்தைய காங்., ஆட்சியின் போது நடந்த ஊழல்கள், தவறான நிதி மேலாண்மை ஆகியவற்றால் ஓய்விற்கு பிறகு என்னால் எந்த தொழிலும் செய்ய முடியவில்லை. தவறான நிதி மேலாண்மை என்பது உடனடியாக வந்தது கிடையாது.

இது கடந்த சில ஆண்டுகளால் நடந்த தவறான நடவடிக்கை.மோடி அரசை மட்டும் பொருளாதார சரிவிற்கு காரணமாக குற்றம் சாட்டுவது தவறு. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஏற்பட்டது தற்காலிகமான பாதிப்பு. பொருளாதார சரிவிற்கு இதை காரணமாக கூற முடியாது.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது தொடர்பான சில குறிப்புக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது மகனின் கனவை நிறைவேற்றும்படி பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ள பைஜன், தனது இறுதி சடங்குகளுக்கு தனது குடும்பத்தினரை அழைக்க வேண்டாம் என அலகாபாத் நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது உடலை மகன் பார்ப்பதை தான் விரும்பவில்லை எனவும், அலகாபாத்திலேயே தனது உடலை எரித்து விடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories