December 5, 2025, 1:45 PM
26.9 C
Chennai

சாகும் முன் பிரதமருக்கு எழுதிய கடிதம்! பொருளாதார மந்தம் பசி’யால் வந்தது!

24 June27 PM Modi - 2025

அலகாபாத்: நாட்டின் தற்போதைய பொருளாதார சரிவிற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமே காரணம் என ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர், பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர் பைஜன் தாஸ்(55). இவர் உத்திரபிரதேச மாநிலத்தின் அலகாபாத்தை சேர்ந்தவர். இவர் செப்.,6 ம் தேதி விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். செப்.,8ம் தேதி நாள் முழுவதும் அறையை விட்டு பைஜன் வெளியே வராததால், விடுதி ஊழியர் அளித்த தகவலின் பேரில் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

p chidambaram - 2025

அப்போது பைஜன், ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு 5 பக்க தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அத்துடன் தனது இறுதி சடங்குகளுக்காகவும், அறை வாடகைக்காகவும் ரூ.2000 வைத்துள்ளார். தனது நிதி நிலைமை மோசமாக உள்ளதால் தன்னால் அதற்கு மேல் பணம் தர இயலவில்லை எனவும் பைஜன் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பைஜன் , பிரதமருக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில், “நாட்டின் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம். மோடி அரசு தான் பொருளாதார சரிவுக்கு காரணம் என யாராலும் கூற முடியாது.

letter to modi - 2025

முந்தைய காங்., ஆட்சியின் போது நடந்த ஊழல்கள், தவறான நிதி மேலாண்மை ஆகியவற்றால் ஓய்விற்கு பிறகு என்னால் எந்த தொழிலும் செய்ய முடியவில்லை. தவறான நிதி மேலாண்மை என்பது உடனடியாக வந்தது கிடையாது.

இது கடந்த சில ஆண்டுகளால் நடந்த தவறான நடவடிக்கை.மோடி அரசை மட்டும் பொருளாதார சரிவிற்கு காரணமாக குற்றம் சாட்டுவது தவறு. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஏற்பட்டது தற்காலிகமான பாதிப்பு. பொருளாதார சரிவிற்கு இதை காரணமாக கூற முடியாது.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது தொடர்பான சில குறிப்புக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது மகனின் கனவை நிறைவேற்றும்படி பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ள பைஜன், தனது இறுதி சடங்குகளுக்கு தனது குடும்பத்தினரை அழைக்க வேண்டாம் என அலகாபாத் நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது உடலை மகன் பார்ப்பதை தான் விரும்பவில்லை எனவும், அலகாபாத்திலேயே தனது உடலை எரித்து விடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories