தமிழிசையை சந்தித்து வாழ்த்திய ரோசய்யா!

Published:

thamilisai rosaiya - 2026

தெலங்கானா ஆளுநர் தமிழிசையை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், இளம் வயதில் ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவியேற்ற நபர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். இவர், கடந்த 8-ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் முன்னாள் ஆளுநர் ரோசய்யா, தற்போதைய தெலங்கானா ஆளுநர் தமிழிசையை நேற்று ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பதவி காலத்தில் சிறப்பாக பணிபுரிய தமிழிசைக்கு வாழ்த்து கூறிய ரோசய்யா, தான் தமிழக ஆளுநராக இருந்த காலத்தில் சென்னையில் தங்கி இருந்த நாட்களையும் நினைவு கூர்ந்தார்.

இதனிடையே, தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பவர்கள் பூங்கொத்துகளுக்குப் பதிலாக பள்ளிக் குழந்தைகளுக்கு பயனளிக்கும் நோட்டுகள், டைரிகள், குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள் போன்றவற்றை பரிசளிக்கலாமே என்று மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!


Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img