தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆண்டு தோறும் ஏழை எளியோருக்கு மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் மாவட்டம் தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த ஆண்டு மக்களுக்காக மக்கள் பணி திண்டுக்கல் மாவட்ட நிகழ்ச்சியின் போது விஜயகாந்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என திண்டுகல் நகர நிர்வாகி கஜேந்திர பிரபு ஆசைப்பட, அது முடியாமல் போக வருத்தமடைந்த அவர் தனக்கு தானே தீயிட்டு கொண்டார், உடனே மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை தரப்பட,விஷயம் கேள்விப்பட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் அவரது மனைவியும் மருத்துவமனை சென்று ஆறுதல் கூறினார்கள் இந்நிலையில்
கஜேந்திர பிரபு சிகிச்சை பலனின்றி இறந்து போக அவரது மகன்கன் படிப்பு செலவை தேமுதிக ஏற்கும் என விஜயகாந்த் அறிவித்தார்
அதன்படி தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்கள் இருவரது படிப்பிற்காகவும் 2 இலட்சம் ரூபாயை அவர்களை வரவழைத்து இன்று வழங்கினார்


