December 5, 2025, 2:56 PM
26.9 C
Chennai

இ-மதிப்பீடு முறை அறிமுகம்! அக்டோபர் 8 முதல் அமல்!

income - 2025

வருமான வரி செலுத்துகிறவர்கள் அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ அல்லது கவனக்குறைவாகவோ தவறான தகவல்களை அளித்து விட்டால், ஆய்வின்போது, அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கடுமையாக நடந்துகொள்வதாக பொதுவான புகார் உள்ளது. இது தொடர்பாக மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

“தற்போது உள்ள வருமான வரி ஆய்வு மதிப்பீடுகளில் வரிசெலுத்துவோர் மற்றும் வருமான வரி துறைக்கு இடையே உயர்மட்ட அளவில் தனிப்பட்ட கலந்துரையாடல்கள் நடக்கின்றன. இது வருமான வரி அதிகாரிகள் தரப்பில் விரும்பத்தகாத நடைமுறைகளுக்கு வழி வகுக்கிறது.

பிரதமரின் தொலைநோக்குப்பார்வைக்கு வடிவம் கொடுக்கும் வகையிலும் மின்னணு முறையில் முகமற்ற மதிப்பீடு முறை கொண்டு வரப்படும். இதில் மனிதர்கள் முகத்துக்கு முகம் பார்ப்பது தவிர்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும்” என அறிவித்தார்.

அதன்படி, இ-மதிப்பீடு செயல்முறை என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்துகிறது. இந்த நடைமுறை, மறைமுக வரி மதிப்பீடு முறையாகும். எனவே இது முகமற்ற அல்லது பெயரில்லாத மதிப்பீடு முறை எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த முறையின்கீழ், வருமான வரி மதிப்பீடு ஆய்வு தொடர்பாக வருமான வரி செலுத்துவோருக்கு, வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப மாட்டார்கள். அதற்கு பதிலாக தேசிய இ-மதிப்பீட்டு மையம் நோட்டீஸ் அனுப்பும்.

இந்த நோட்டீசுக்கு வரிசெலுத்துவோர் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலைப் பெற்ற பின், அவர்களின் விவகாரம் தானியங்கி முறையைப் பயன்படுத்தி ஒரு அதிகாரிக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அவர் அதைக் கையாளுவார்.

nirmalaseetharaman1 - 2025

இந்த புதிய முறையின்கீழ், வருமான வரி செலுத்துகிறவரோ, அவரது பிரதிநிதியோ வருமான வரித்துறை நடவடிக்கை தொடர்பாக தேசிய இ-மதிப்பீட்டு மையம் முன்பாகவோ, மண்டல இ மதிப்பீட்டு மையத்திலோ அல்லது இந்த முறையின்கீழ் உருவாக்கப்படுகிற ஒரு பிரிவின் முன்பாகவோ நேரில் செல்ல தேவையில்லை. அப்படி செல்லாமலே அவர்கள் தங்கள் வேலையை முடித்துக்கொள்ள முடியும்.

அதே நேரத்தில் வருமான வரி செலுத்துகிறவர், தங்கள் பிரதிநிதி வருமான வரி அதிகாரியை நேரில் சந்தித்து, விளக்கம் அளிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கும் வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் இதுபோன்ற விசாரணைகள், வீடியோ பதிவு அல்லது அது போன்ற வேறு வசதிகள் மூலமோ பிரத்யேகமாக நடத்தப்படும்.

எனவே முறைகேட்டுக்கு வழி இல்லாமல் போய் விடும்.இந்த புதிய நடைமுறை பற்றிய அறிக்கையை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டு உள்ளது. அடுத்த மாதம் 8-ந் தேதி விஜயதசமி முதல் இது புதிய நடைமுறைக்கு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories