பெங்களூரில் உள்ள பானஸ்வாடி என்னும் பகுதியை சேர்ந்தவர் சீமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளும் குழப்பங்களும் தீர்ந்து வீட்டிற்கு ஐஸ்வர்யம் கிடைக்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட சாமியார் ஒருவரை பார்க்க சென்றுள்ளார்.
நான் சொல்லுவதைப் போல் பூஜைகளை செய்தால் உன் பிரச்சனை நீங்கி அதிர்ஷ்டம் பெருகும் என சாமியார் கூறியிருக்கிறார், அவ்வாறு அவர் சொன்ன எல்லாவற்றையும் தவறாமல் செய்துள்ளார் சீமா.
இதில் முதல் கட்டமாக சீமாவின் வீட்டில் பூஜை செய்யவேண்டும் என சாமியார் கூற, அதை ஏற்றுக்கொண்ட சீமா பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.
இரண்டாவது பூஜையை இரவு நேரத்தில் காட்டில் தனியாக செய்யவேண்டும் என சாமியார் கூற, அதையும் நம்பி தனியே அவருடன் காட்டுக்குள் சென்றுள்ளார் சீமா. அங்கே சென்றதும் அந்த சாமியார் கீதாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
தனது ஆசைக்கு இறங்கவேண்டும் என்றும், அப்போதுதான் பூஜை பலிக்கும் எனவும் அந்த சாமியார் சீமாவை மிரட்டியுள்ளார். ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து ஓடிவந்த சீமா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து அந்த போலி சாமியாரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.