December 5, 2025, 4:51 PM
27.9 C
Chennai

அமெரிக்காவில் மோடி: சீக்கியர்கள், பண்டிட்கள், தாவூதி போரா அமைப்பினர் சந்தித்து பாராட்டு!

sikh community us modi1 - 2025

7 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இன்று காலை ஹூஸ்டன் நகருக்குச் சென்ற பிரதமருக்கு அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. தொடர்ந்து, பல்வேறு அமைப்பினரின் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப் பட்டது.

பின்னர் பிரதமர் மோடி இன்று எரிசக்தி துறை நிறுவன சிஇஓ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக, இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டார்.

பின்னர் பிரதமர் மோடியை பல்வேறு அமைப்பினர் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் கொடுத்து, பிரதமர் மோடியின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டனர்.

sikh community us modi - 2025

ஹூஸ்டன் நகர் வாழ் சீக்கிய அமைப்பினர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்தினர். மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர்கள், அதற்காக மோடியைப் பாராட்டுவதாகவும் கூறினர். பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதில், 1984ல் நடந்த சீக்கியர் படுகொலை குறித்த விவகாரம், தில்லி விமான நிலையத்துக்கு குருநானக் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டுதல், இந்திய அரசியல் சாசனத்தில் 25வது பிரிவு, விசா மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் சில உள்ளன.

சந்திப்புக்குப் பின்னர் சீக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறிய போது, பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்ததுடன், சீக்கியர்களுக்காக மத்திய அரசு செய்த பணிகளுக்காக நன்றி தெரிவித்து கொண்டோம். கர்தார்பூர் வழித் தடத்திற்காக இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தோம். ஹவுடி மோடி கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பது பிரதமர் மோடி எவ்வளவு முக்கியமான தலைவர் என்பதை காட்டுகிறது என்றனர்.

மேலும், சீக்கியர்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறப் பட்டதாகவும், மோடி நமது புலி, அவரை நாம் இரும்பு மனிதர் என்று கூறுவோம், அவருக்கு நாம் ஆதரவளிப்போம் என்று குறிப்பிட்டார், பிரதமர் மோடியைச் சந்தித்த சீக்கியர் குழுவில் இடம்பெற்ற நபர்.

பின்னர் பிரதமர் மோடியை சந்தித்த காஷ்மீர் பண்டிட்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்தியர்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

காஷ்மீர் மீதான மத்திய அரசின் நடவடிக்கைக்கு 7 லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர்.

பின்னர், தாவூதி போரா அமைப்பினர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டு ம.பி.,யின் இந்தூரில், அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories