கும்மிடிப்பூண்டி அருகே கரை கடக்கிறது வர்தா புயல்: சென்னையில் பலத்த மழை

சென்னை:

வர்தா புயல் பழவேற்காடு – கும்மிடிப்பூண்டி இடையே இன்று கரையை கடக்கிறது. சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 7-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாக உருவானது. ‘வர்தா’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.

இந்நிலையில் வர்தா புயல் சென்னைக்கு கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது சென்னையை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னையை புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் புயல் பழவேற்காடு – கும்மிடிப்பூண்டி இடையே இன்று பிற்பகல் கரையைக் கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 67 கி.மீ. வேகத்தில் காற்று வீசத் தொடங்கிவிட்டது. புயல் கரையைக் கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

திருவள்ளூர் பழவேற்காடு சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு பலத்த காற்று வீசி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பலத்த காற்று வீசுவதால் மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து உள்ளன.

சென்னை நகருக்குள்ளும் பலத்த காற்றுவீசியது. காலை நேரம் வீசிய காற்றில் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. சாலையில் இலைகள்,சருகுகள், மரங்களில் குச்சிகள் பரவலாக விழுந்து கிடந்தன.

பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இன்று பெரும்பாலான அலுவலகங்களுக்கு பணியாளர்கள் செல்லாததால், பேருந்து, புறநகர் ரயில்களில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன. பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories