பிசிசிஐ தலைவர் ஆகிறார் கங்குலி; செயலாளர் அமித் ஷா மகன்?

11 May 22 ganguly - 2026

பிசிசிஐ-யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிஜேஷ் படேல்தான் அடுத்த பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பம் நடந்துள்ளது.

பிசிசிஐ-யில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க நீதிபதி லோதா தலைமையிலான குழுவை அமைத்தது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.

லோதா கமிட்டியின் பரிந்துரையின்படி மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது

இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ-யின் தேர்தல்களும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பிரிஜேஷ் படேலை போட்டியிட வைத்து அவரை வெற்றி பெற வைக்க எண்ணினார் தமிழகத்தின் ஸ்ரீநிவாசன். .

ALSO READ:  கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

இந்த நிலையில், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலியின் பெயரும், பிசிசிஐ தலைவர் பதவிக்கு அடிபட்டது.

கங்குலிக்காக களமிறங்கி, அவரை தலைவராக்கும் செயல்களில் இறங்கினார் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஸ்ரீநிவாசன் கடந்த சனிக்கிழமை சந்தித்ததாகவும், அதே நாளில் கங்குலியும் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, நேற்று மும்பையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிசிசிஐ-யின் அனைத்து உறுப்பினர்களும் அதிகாரபூர்வமற்ற வகையில் சந்தித்துள்ளனர் இதில் சில முக்கிய விவாதங்கள் குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது

இந்த விவாதங்களின் போது சவுரவ் கங்குலிக்கு ஆதரவு அளிப்பது என பெரும்பாலானவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்

இதன்மூலம் பிசிசிஐ தலைவருக்கான போட்டியிலிருந்து பிரிஜேஷ் படேல் விலகும் முடிவில் இருப்பதாகவும், அவர் ஐபிஎல் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கங்குலியைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத பட்சத்தில் கங்குலி ஒருமனதாக பிசிசிஐ-யின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுவார்.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷா பிசிசிஐ-யின் செயலாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. .

இது தொடர்பாக பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “ மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் கங்குலியின் பெயர் முன்மொழியப்பட்டது. 10 மாதங்கள்தான் கங்குலி தலைவர் பொறுப்பில் இருப்பார், எனினும் அவர் வங்காள கிரிக்கெட் சங்கத்தை திறம்பட நடத்திய அனுபவம் கொண்டவர். அதனால் கங்குலி தேர்வாவதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. கடந்த 33 மாதங்களாக நீதிமன்றம் நியமித்த குழுவால் கிரிக்கெட் சங்கத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இது அனைத்தையும் குறைந்த காலத்தில் கங்குலி சரி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories