தெலங்கானா ராஜ்பவனில் தமிழிசை கொண்டாடிய முதல் தீபாவளி!

telungana govenor tamilisai - 2026

ஹைதராபாத் ராஜ்பவனில் விமரிசையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ராஜ் பவனில் உள்ள ‘பிரஜா தர்பாரில்’ அரங்கில் பொதுமக்களோடு சேர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தம்பதி தீபாவளி கொண்டாடினர்.

மீட் அண்ட் கிரீட் நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஆளுனர் தமிழிசை இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்காணா மாநில மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பேசுகையில் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியான சூழலில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தெலங்காணா மாநிலத்திற்கு தாம் ஆளுநராக வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

தெலங்காணா மாநில மக்கள் தன்னை சொந்த சகோதரியாகவே ஏற்று அன்பு செலுத்துவதாக தெரிவித்தார். ராஜ்பவனில் பிளாஸ்டிக் தடை செய்வதோடு எப்போதும் பசுமையாக வைத்திருக்கும்படி தீர்மானித்திருப்பதாக கூறினார். அதனால் ராஜ்பவனில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதாக தெரிவித்தார் .

மாநில அரசு ஒவ்வொரு தொகுதியிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான “கிரிஜன ஆசிரம பாடசாலை”களை ஏற்பாடு செய்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல் ரமணா, ராவுல சந்திரசேகர் ரெட்டி, பிசி கமிஷன் சேர்மன் ராமுலு முதலானோர் ஆளுநர் தம்பதிகளை சந்தித்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது சாலை போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி ஆளுநரிடம் விண்ணப்பக் கடிதம் அளித்தனர். அது பற்றி அரசாங்கமே பார்த்துக் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories