தெலங்கானா ராஜ்பவனில் தமிழிசை கொண்டாடிய முதல் தீபாவளி!

Published:

telungana govenor tamilisai - 2026

ஹைதராபாத் ராஜ்பவனில் விமரிசையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ராஜ் பவனில் உள்ள ‘பிரஜா தர்பாரில்’ அரங்கில் பொதுமக்களோடு சேர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தம்பதி தீபாவளி கொண்டாடினர்.

மீட் அண்ட் கிரீட் நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஆளுனர் தமிழிசை இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்காணா மாநில மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பேசுகையில் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியான சூழலில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தெலங்காணா மாநிலத்திற்கு தாம் ஆளுநராக வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

தெலங்காணா மாநில மக்கள் தன்னை சொந்த சகோதரியாகவே ஏற்று அன்பு செலுத்துவதாக தெரிவித்தார். ராஜ்பவனில் பிளாஸ்டிக் தடை செய்வதோடு எப்போதும் பசுமையாக வைத்திருக்கும்படி தீர்மானித்திருப்பதாக கூறினார். அதனால் ராஜ்பவனில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதாக தெரிவித்தார் .

மாநில அரசு ஒவ்வொரு தொகுதியிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான “கிரிஜன ஆசிரம பாடசாலை”களை ஏற்பாடு செய்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல் ரமணா, ராவுல சந்திரசேகர் ரெட்டி, பிசி கமிஷன் சேர்மன் ராமுலு முதலானோர் ஆளுநர் தம்பதிகளை சந்தித்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது சாலை போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி ஆளுநரிடம் விண்ணப்பக் கடிதம் அளித்தனர். அது பற்றி அரசாங்கமே பார்த்துக் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img