திருமண ஆசை காட்டி உறவு கொண்டால் பெண்ணே பொறுப்பு!: மும்பை நீதிமன்றத்தில் தீர்ப்பு

Published:

மும்பை:

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன் காதலர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி தன்னை ஆசைக்காட்டி தூண்டி உறவு கொண்டுவிட்டு ஏமாற்றிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி 21 வயது காதலன் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மிருதுளா பக்த்கர் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில்…

திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளிப்பதை, உறவுக்கு தூண்டியதாக ஒவ்வொரு பலாத்கார வழக்கிலும் கருத முடியாது. படித்த இளம்பெண் திருமணத்துக்கு முன்பாக பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளித்தால், அவருடைய முடிவுக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

உறவுக்கு இளம்பெண் தூண்டப்பட்டார் என்பதை நம்புவதற்கு முகாந்திரமாக ஆதாரங்கள் இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற வழக்குகளில், திருமண ஆசை காட்டி ‘தூண்டினார்’ என்று கூறமுடியாது.

இந்த சமுதாயம் மாறி வருகிறது. அதேவேளையில் பல நடத்தை நெறிகளை இந்த சமுதாயம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக் கிறது. குறிப்பாக திருமணத்தின் போது கற்புடையவளாக இருக்க வேண்டியது பெண்ணின் பொறுப்பு என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்த சமுதாயம் பல நம்பிக்கைகளில் இருந்து விடுபட முயற்சித்தாலும், திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவை கண்டிக்கிறது.. என்று கூறி,  குற்றம் சாட்டப்பட்ட காதல இளைஞருக்கு முன்ஜாமீனும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

மேலும், ‘படித்த, வயதுக்கு வந்த பெண்கள் திருமணத்துக்கு முன்பு உறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்ற முந்தைய தீர்ப்பையும் நீதிபதி மிருதுளா சுட்டிக்காட்டினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img