தீவைத்து எரிக்கப்பட்ட பெண் தாசில்தாரை காப்பாற்ற முயன்ற கார் டிரைவரும் மரணம்!

Published:

vijaya reddy driver - 2026

தெலங்கானா தாசில்தார் விஜயா ரெட்டியை காப்பாற்ற முயன்ற டிரைவரும் தீவிர தீக்காயத்தால் இன்று மரணமடைந்தார்.

தெலங்கானாவில், தாசில்தார் விஜயாரெட்டியின் கார் டிரைவர் குருநாதம் கஞ்சன்பாக், அப்போலோ டிஆர்டிஓ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

நேற்று சுரேஷ் என்பவன் தாசில்தார் விஜயாரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, கொலை செய்தான்.

tahsildar muder telangana - 2026
தீவைத்து எரிக்கப் பட்ட தாசில்தார் விஜயா ரெட்டி குடும்பத்துடன்…

அதை அறிந்து, விஜயாரெட்டியை காப்பாற்ற முயன்ற அவருடைய கார் டிரைவர் குருநாதம் தீவிரமாக தீக் காயமடைந்தார். 80% தீக்காயங்களுடன் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குருநாதம் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

அவருடைய சொந்த ஊர் சூர்யா பேட்டை மாவட்டம் கதிடேபல்லி மண்டலம் வெலிதண்ட கிராமம். குருநாதம் மரணத்தால் வெலிதண்ட கிராமமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img