அலுவலகத்தில் கூட ஹெல்மெட்! இவர்களின் அச்சமே வேறு மாதிரியானது!

Published:

IMG 20191106 WA0006 - 2026

அலுவலகத்தில் கூட ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் ஊழியர்கள்.

உத்தரபிரதேசத்தில் பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த மின்சார வாரிய ஊழியர்கள் தினமும் ஹெல்மெட் அணிந்தே அலுவலகம் வருவர். அதுமட்டுமல்ல. அலுவலகத்திற்கு வந்த பின்னும் கூட ஹெல்மெட்டை கழற்றி வைக்காமல் வேலை செய்வார்.

மத்திய அரசு பிறப்பித்த மோட்டார் வாகன சட்டத் திருத்தம் 2019 ன் மேல் உள்ள அச்சத்தாலோ பக்தியாலோ இவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

பணிபுரியும் இடத்தில் உயிரை காத்துக் கொள்வதற்கு வேறு வழியின்றி இந்த மார்க்கத்தை கடைபிடிக்கின்றனர்.

மின்சார வாரியத்தை சேர்ந்த பந்தா மாவட்டத்தின் ஒரு அலுவலகம் சிதிலமடைந்துள்ளது. மேற்கூரை உடைந்து எப்போது தலைமேல் விழுமோ என்பது தெரியாத நிலை . சிறிய மழைக்கே நீர் ஒழுகும் பரிதாபம்.

இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பலன் இல்லாமல் போனதால் ஊழியர்கள் மாற்று வழியாக ஹெல்மெட் அணிந்து பணி புரிவதை தேர்ந்தெடுத்துள்ளனர் .

ஹெல்மெட் அணிந்து ஆபீஸில் பணிபுரியும் ஊழியர்களின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் யோகி ஆதித்யநாத் அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img