December 6, 2025, 10:04 AM
26.8 C
Chennai

7 வயது சிறுவன் கடத்தல்: குற்றவாளியைப் பார்த்து அதிர்ந்த போலீஸார்!

boy kidnappd - 2025

மீர்பேட்டில் 7 வயது சிறுவனின் கடத்தல். குற்றவாளியை பார்த்து போலீசார் அதிர்ச்சி!

சினிமா, சீரியல் பார்ப்பதன் விளைவு பிள்ளைகளின் மேல் எந்த அளவு உள்ளது என்பதை தெரிவிக்கும் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது .

பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், ஒரு 7 வயது சிறுவனைக் கடத்தியுள்ளான். 3 லட்சம் ரூபாய் தரச் சொல்லி பெற்றோரை மிரட்டி உள்ளான். மீர்பேட்டில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்குமார் என்ற மென்பொருள் பணியாளர் தன் மனைவி மற்றும் மகன் அர்ஜுனுடன் மீர்பேட் டிஎஸ்ஆர் காலனியில் வசித்து வருகிறார். ஞாயிறு மதியம் 3 மணிக்கு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அர்ஜுன் திடீரென்று காணாமல் போனான். பெற்றோர் எல்லா இடங்களிலும் சிறுவனை தேட ஆரம்பித்தனர்.

சற்றைக்கெல்லாம் ராஜ்குமாருக்கு ஓரு போன் வந்தது. “உங்கள் மகனை கடத்தி விட்டோம். மூன்று லட்சம் கொடுத்தால் விட்டு விடுவோம்” என்று கூறிவிட்டு உடனே போன் கட்டாகி விட்டது.

அதனால் கவலை கொண்ட ராஜ்குமார் மீர்பேட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் கடத்தல்காரனுக்கு வலை போடத் தொடங்கினர்.

அதற்குள் கடத்தல்காரனிடமிருந்து அடிக்கடி பணம் கேட்டு ராஜ்குமாருக்கு போன் வரத் தொடங்கியது. அதனால் போலீசார் போன் சிக்னலைக் கொண்டு கடத்தல்காரனின் லொகேஷனை அடையாளம் கண்டு அங்கே சென்றனர்.

அந்த கடத்தல்காரரைப் பார்த்ததும் அனைவரும் ஒரேயடியாக அதிர்ச்சி அடைந்தனர். குற்றவாளி யாரோ முரடன் அல்ல. பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் . அவன் போலீசாரைக் கண்டதும் ஓட முயற்சித்தான். ஆனால் அவனைப் பிடித்து ஜீப்பில் ஏற்றினர். அர்ஜுனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீசார்.

ஆனால் இந்தக் கடத்தலில் வேறு யாருடைய கரமாவது உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாக மீர்பேட் இன்ஸ்பெக்டர் யாதய்யா தெரிவித்தார்.

சீரியலும் சினிமாவும் சிறுபிள்ளைகளின் குற்றச் செயல்களை தூண்டிவிட்டு வளர்கின்றன என்று உள்ளூர் மக்கள் விமர்சனம் செய்தனர். பெற்றோர் பிள்ளைகளின் நடத்தை மீது ஒரு கண் வைக்காவிட்டால் இப்படித்தான் கெட்டுப் போவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories