மனைவி டீ போட்டுத் தரலன்னு… கணவன் தற்கொலை!

Published:

husband suicide - 2026

மனைவி தேநீர் போட்டு தரவில்லை என்று கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மனைவி டீ தயாரித்துக் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் ஞாயிறன்று ஒருவர் கண நேர ஆவேசத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ‘ஜீடிமெட்லா’வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகபூப் நகர் மாவட்டம் நாராயண பேட்டையைச் சேர்ந்த பக்துல அடிவய்யா(35), ஜோதி தம்பதி. 10 ஆண்டுகள் முன் வேலை தேடி ஹைதராபாத் வந்து புறநகர் பகுதியான ‘ஜீடிமெட்லா’ பாலய்யா நகரில் இவர்கள் இருவரும் வசித்து வருகின்றனர். இவர்களது இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்தானாம்!

ஞாயிறன்று காலை அடிவய்யா டீ போட்டுத் தரும்படி தனது காதல் மனைவியைக் கேட்டுள்ளார். மனைவி சற்று நேரம் கழித்து டீ போட்டுத் தருவதாகக் கூறியுள்ளார்.

ஆனால் உடனே டீ வேண்டும் என்று கூறி, அதனால் ஏற்பட்ட மனஸ்தாபத்தால், அடிவய்யா மது அருந்துவிட்டு அருகிலிருந்த க்வாரி நீர்க் குழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

சம்பவ இடத்திற்கு வந்த ‘ஜகத்கிரிகுட்டா’ போலீசார் உடலை போஸ்ட் மார்டத்திற்கு காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரித்து வருகின்றனர்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img