கடும் கட்டுப்பாடுகளுடன்… பம்பை வரை பயணம்!

sabarimala 04 - 2026

போலீசாரின் கட்டுப்பாடுகளுடன் நிலக்கல்லிலிருந்து சபரிமலை பம்பைக்கு சிறிய வாகனங்களில் பயணம் தொடங்கியுள்ளது.

ஒரு மணி நேரத்தில் நிலக்கல்லுக்கு திரும்பி வர வேண்டும் என்று போலீசார் வற்புறுத்தி வருகின்றனர்.

கடந்த வருடம் பெருமழை பெய்து பம்பை செல்லும் சாலைகள் கடும் சேதமடைந்தன . அதன் பின்னர் கடந்த சீசனில் பம்பைக்கு தனியார் வாகனங்கள் அனுமதிக்கப் படவில்லை. கேரள அரசு பேருந்தில் மட்டுமே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள் சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து மண்டல சீசனின் போதும் அவ்வாறே செய்யப்பட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இரு தினங்களுக்கு முன்னர் கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் … நிலக்கல்லில் இருந்து பம்பை வரை 12 இருக்கைகள் வரை உள்ள சிறிய ரக வாகனங்கள் சென்று பக்தர்களை இறக்கி விட்டு திரும்ப நிலக்கல்லுக்கு வரலாம் என்று கூறியது.

இதன் படி சிறிய வாகனங்கள் பம்பை வரை செல்ல போலீசார் அனுமதித்தனர் அதேநேரம் பம்பையில் பக்தர்களை இறக்கிவிட்டு ஒரு மணி நேரத்துக்குள் நிலக்கல்லுக்கு திரும்பி வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் பம்பை நோக்கி அனுப்பப்படுகின்றனர்

அதேபோல் டிரைவர் உள்ள வாகனங்கள் மட்டுமே அவ்வாறு அனுமதிக்கப்படுகிறது ஐயப்ப பக்தராக வரும் நபர்கள் ஓட்டி வரும் வாகனங்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்படுகிறது .

கடந்த ஆண்டு கார்த்திகை தொடக்கத்தில் தினமும் ஆயிரத்துக்கும் குறைவான வாகனங்கள் வந்தன. ஆனால் தற்போது 5 ஆயிரம் வாகனங்கள் வரை வருகின்றன இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்படலாம் என்று போலீசார் கூறுகின்றனர்

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இந்த ஆண்டு அதிக அளவில் வாகனங்கள் பம்பை நோக்கி வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது இதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories