கடும் கட்டுப்பாடுகளுடன்… பம்பை வரை பயணம்!

sabarimala 04 - 2026

போலீசாரின் கட்டுப்பாடுகளுடன் நிலக்கல்லிலிருந்து சபரிமலை பம்பைக்கு சிறிய வாகனங்களில் பயணம் தொடங்கியுள்ளது.

ஒரு மணி நேரத்தில் நிலக்கல்லுக்கு திரும்பி வர வேண்டும் என்று போலீசார் வற்புறுத்தி வருகின்றனர்.

கடந்த வருடம் பெருமழை பெய்து பம்பை செல்லும் சாலைகள் கடும் சேதமடைந்தன . அதன் பின்னர் கடந்த சீசனில் பம்பைக்கு தனியார் வாகனங்கள் அனுமதிக்கப் படவில்லை. கேரள அரசு பேருந்தில் மட்டுமே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள் சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து மண்டல சீசனின் போதும் அவ்வாறே செய்யப்பட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இரு தினங்களுக்கு முன்னர் கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் … நிலக்கல்லில் இருந்து பம்பை வரை 12 இருக்கைகள் வரை உள்ள சிறிய ரக வாகனங்கள் சென்று பக்தர்களை இறக்கி விட்டு திரும்ப நிலக்கல்லுக்கு வரலாம் என்று கூறியது.

இதன் படி சிறிய வாகனங்கள் பம்பை வரை செல்ல போலீசார் அனுமதித்தனர் அதேநேரம் பம்பையில் பக்தர்களை இறக்கிவிட்டு ஒரு மணி நேரத்துக்குள் நிலக்கல்லுக்கு திரும்பி வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் பம்பை நோக்கி அனுப்பப்படுகின்றனர்

அதேபோல் டிரைவர் உள்ள வாகனங்கள் மட்டுமே அவ்வாறு அனுமதிக்கப்படுகிறது ஐயப்ப பக்தராக வரும் நபர்கள் ஓட்டி வரும் வாகனங்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்படுகிறது .

கடந்த ஆண்டு கார்த்திகை தொடக்கத்தில் தினமும் ஆயிரத்துக்கும் குறைவான வாகனங்கள் வந்தன. ஆனால் தற்போது 5 ஆயிரம் வாகனங்கள் வரை வருகின்றன இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்படலாம் என்று போலீசார் கூறுகின்றனர்

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இந்த ஆண்டு அதிக அளவில் வாகனங்கள் பம்பை நோக்கி வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது இதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories