December 5, 2025, 7:03 PM
26.7 C
Chennai

பாம்பு கடித்து இறந்த பள்ளி மாணவி: குடும்பத்தாரை சந்தித்து அமைச்சர்கள் இருவர் ஆறுதல்!

snake byte girl - 2025

திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவி ஒருவர் உயிரிழந்ததை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, மாநில அமைச்சர்கள் இருவர், பாதிக்கப் பட்ட மாணவியின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

கேரள கல்வித் துறை அமைச்சர் சி ரவீந்திரநாத் மற்றும் விவசாயத் துறை அமைச்சர் வி எஸ் சுனில் குமார் ஆகியோர், மாணவி ஷேகலாவின் தந்தையைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.

வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் உள்ள சர்வஜென அரசுப்பள்ளியில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. வகுப்பறையில் 5ம் வகுப்பு மாணவி சகிலா செரினை சுவற்றின் ஓட்டையில் பதுங்கி இருந்த பாம்பு கடித்துள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். இதனை ஆசிரியர் விஜில் பொருட்படுத்தாமல் போனதால் 10 நிமிடங்களில் மாணவி  சகிலா செரின் மயக்கமடைந்தார். மாணவி மயக்கம் அடைந்த பிறகே பாம்பு கடித்தது தெரியவந்துள்ளது. பிறகு மாணவியை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு விஷ முறிவு மருந்து இல்லாமல் போனதால் பள்ளிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சகிலா செரின் உரியிரிழந்துவிட்டார். இதனை கண்டித்து சுல்தான் பத்தேரி பள்ளி முன்பு மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வயநாடு மாவட்ட ஆட்சியர் அலட்சியமாக இருந்தததாக கூறி ஆசிரியர் விஜில், அரசு மருத்துவர் மரியா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். எனினும் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்வித்துறை அலுவலகம் முன்பு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசிரியர் விஜில் மற்றும் மருத்துவர் மரியாவை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாணவி ஷேலா ஷெரினின் இறப்பு குறித்து ராகுல் காந்தி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஷேலா ஷெரின் படித்த வகுப்பறையில் இருந்த பொந்தினுள் மறைந்திருந்த பாம்பு ஒன்று கடித்து, அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ஷேலா ஷெரின் படித்த சர்வாஜனா உயர்நிலைப் பள்ளி அந்த பகுதியில் இருக்கக்கூடிய மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்று. அதனால் அரசு உடனடியாக இந்தப் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை சீர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தப் பள்ளிக்குத் தேவையான உதவிகளை செய்ய நான் காத்திருக்கிறேன்…. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

கேரளாவில், பள்ளியின் உட்கட்டமைப்பு, பாதுகாப்பு சரி இல்லாததால் தான், மாணவி பாம்பு கடித்து இறந்துள்ளார். பள்ளியை கூட கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முதல்வர் பினரயி விஜயன் தான் பொறுப்பு. முதலில் அவர் moral தார்மிகமாக மன்னிப்பு கேட்டுவிட்டு, அதிகாரி, ஆசிரியர்களை பணி நீக்கம் செய்திருக்க வேண்டும். என்று, தமிழக பாஜக.,மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தன் அறிக்கை ஒன்றில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories