December 6, 2025, 4:23 AM
24.9 C
Chennai

சபரிமலைக்கு செல்ல ரஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு தர முடியாது! போலீஸ் கைவிரிப்பு!

rahenafathima - 2025

சபரிமலைக்கு வருவதற்கு தனக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று ரஹானா பாத்திமா கொடுத்த விண்ணப்பத்தை கேரள காவல்துறை நிராகரித்துவிட்டது. நீதிமன்ற உத்தரவுடன் வந்தால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்று கூறி விட்டது.

கேரளாவைச் சேர்ந்த ரஹானா பாத்திமா கடந்த வருடம் சபரிமலைக்கு வருவேன் என்று முன்னதாகவே சமூகவலைதளங்களில் தகவலை பரப்பி விட்டு சபரிமலை வந்தார். அந்த நேரம் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று சுற்றுலாத்தலம் போல கருதிக்கொண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது . ஆனால் சபரிமலை சுற்றுலாத்தலம் அல்ல மத வழிபாட்டுத் தலம் என்று பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர் .

பக்தர்களின் ஆவேசத்தையும் உணர்வுகளையும் மீறி ஹிந்து மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் விதத்தில், சபரிமலை தலத்தின் பெருமையை கொச்சைப்படுத்தும் விதத்தில், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கிறிஸ்தவர்கள் பெருமளவில் சபரிமலையின் புனிதத்தை குலைக்க முயன்றார்கள் ..

அதற்கு மாநில அரசும் நீதிமன்றத்தின் உத்தரவை காரணம் காட்டி மிகவும் துடிப்புடன் சபரிமலை புனிதத்தை அழிப்பதற்கு துணை நின்றது.

ஆனால் அடுத்து நடந்த தேர்தலில் கேரள கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வியை அடைந்தது இதனால் இப்போது விழித்துக் கொண்டுள்ள மாநில அரசு, தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவு அப்படியே தொடர்ந்தாலும் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதைக் காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து யோசிக்க முடியும் என்று கைவிரித்து விட்டது.

குறிப்பாக ரஹானா பாத்திமா கடந்தமுறை சபரிமலைக்கு வந்தபோது நாப்கின்கள் மற்றும் மலையின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பொருள்களுடன் வந்ததால் பக்தர்கள் கடும் கோபம் அடைந்தனர்.

இந்தநிலையில் இந்த முறையும் நான் சபரிமலைக்கு செல்வேன் என்று ரஹானா பாத்திமா செய்தியாளர்களை அழைத்து பேட்டி அளித்தார். ஆனால் கேரள தேவசம் போர்டு அமைச்சர் இதுகுறித்து கூறுகையில் சபரிமலை ஆக்டிவிஸ்ட் களுக்கான இடமில்லை இது புனிதத்தலம் பக்தர்களுக்கான வழிபாட்டுத்தலம் என்று உறுதியாக கூறியுள்ளார்

இந்த நிலையில் ரஹானா பாத்திமா இந்த ஆண்டும் சபரிமலை செல்ல போவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி கொச்சி காவல்துறை துணை ஆணையரிடம் நேற்று மனு ஒன்றை அளித்தார்

ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுடன் வந்தால் மட்டுமே காவல்துறை பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .

முன்னதாக கடந்த வருடம் பிஎஸ்என்எல் ஊழியராக இருந்த ரஹானா பாத்திமா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது சஸ்பெண்ட் நடவடிக்கை இப்போதும் தொடர்கிறது .

அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மத உணர்வை புண்படுத்திய கைது செய்யப்பட்டார் . அந்த வழக்குகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories